கிருஷ்ணா செல்போனில் சிக்கிய கோட் Word.. அடுத்தடுத்து மாட்டப்போகும் திரை பிரபலங்கள்!! 

Photo of author

By Rupa

கிருஷ்ணா செல்போனில் சிக்கிய கோட் Word.. அடுத்தடுத்து மாட்டப்போகும் திரை பிரபலங்கள்!! 

Rupa

Cinema: பாரில் நடைபெற்ற மோதல் சம்பந்தமாக கைது செய்யப்பட்ட அதிமுக-வின் ஐடி விங் பிரசாந்த்தை விசாரணை செய்கையில் போதை பொருள் கை மாறுதல் நடந்துள்ளதும் அதில் முக்கிய நபராக நடிகர் ஸ்ரீகாந்த் இருப்பதும் தெரியவந்தது. போலீசார் ஸ்ரீகாந்தை கைது செய்து ரத்த மாதிரி பரிசோதனை செய்ததில் அவர் கொக்கைன் உபயோகித்தது அம்பலமானது. அதுமட்டுமின்றி கொக்கைன் வைத்து அவர் பார்ட்டி நடத்துவதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேற்கொண்டு இது ரீதியாக அவரிடம் போலீசார் விசாரணை செய்கையில், எனக்கு பிரசாந்த் படம் நடித்ததற்கான பணம் தர வேண்டி இருந்தது. தர முடியாத காரணத்தினால் எனக்கு கொக்கைன் கொடுத்து பழக்கினார் என திடுக்கிடும் தகவலை கூறியுள்ளார். இது ரீதியாக ஸ்ரீகாந்த் சுற்று வட்டாரங்களை விசாரணை செய்கையில் நடிகர் கிருஷ்ணா சிக்கியுள்ளார். ஆனால் அவரிடம் விசாரணை செய்ய தொடர்பு கொண்டபோது தலைமறைவாகி அவரது செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டது.

கட்டாயம் இவரும் கொக்கைனுக்கு பழக்கமானவர் தான் என்று விசாரணை செய்யாமலேயே போலீசாருக்கு நம்பிக்கை வந்து விட்டது. மேற்கொண்டு அவரைப் பிடித்து விசாரணை செய்கையில், எனக்கும் போதைப் பொருளுக்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை. ஏனென்றால் எனக்கு வாயு தொல்லை, இதய படபடப்பு மற்றும் ஆஞ்சியோ சிகிச்சை உள்ளிட்டவை நடந்துள்ளது. இதனால் என்னால் கொக்கைன் போன்ற போதை பொருளை உபயோகிக்க முடியாது என தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமின்றி அவர் ரத்த மாதிரி பரிசோதனையிலும் அவர் கொக்கைன் உபயோகிக்காதது தெரியவந்துள்ளது. மேலும் அவர் வீட்டை சோதனை செய்கையில் அவரது மருத்துவ பரிசோதனை சான்றுகளை கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது போலீசார் அவரது செல்ஃபோன் குறுஞ்செய்திகளின் தரவுகளை எடுத்து விசாரணை செய்து வருகின்றனர்.

அதில் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு பேசியதிலிருந்து தற்போது வரை உள்ள பல மெசேஜ்கள் டெலிட் செய்யப்பட்டுள்ளது. அதில் அவர்கள் கோட் வேர்ட் மூலம் பேசி உள்ளது தெரிய வந்துள்ளது. அந்த நபர்கள் யார் எதற்காக இந்த கோட் வார்ட் என்பது குறித்து தீவிர விசாரணையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். அதுமட்டுமின்றி அவரை கைதும் செய்துள்ளனர்.