அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 20% இடம் அதிகரிப்பு!

0
111

தமிழகத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் கூடுதலாக 20% மாணவர்கள் சேர்க்கைக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

தமிழகத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் அதிகளவில் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளதால் கூடுதலாக 20% மாணவர்கள் சேர்க்கைக்கு கல்லூரிக்கல்வி இயக்ககம் அனுமதியளித்துள்ளது. அதன்படி, கலை பிரிவில் 20%, அறிவியல் பிரிவில் ஆய்வக வசதிக்கு ஏற்ப 20% மாணவர்களை கூடுதலாக சேர்க்கலாம். கூடுதலாக மாணவர்களை சேர்க்க சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகங்களின் அனுமதி பெறவும் அறிவுறுத்தியுள்ளது.

ஏழை, எளிய மாணவர்களின் நலன் கருதி அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 92,000 இடங்கள் உள்ள நிலையில் தற்போது கூடுதலாக 20% இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
Parthipan K