இந்த படிப்புகளுக்கு பொது நுழைவுத் தேர்வு! நாளை காலை 10 மணி முதல் நடைபெறும்!
தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தில் நடப்பு கல்வியாண்டுக்கான முதுகலை எம்சிஏ, எம்பிஏ படிப்புகளுக்கான பொது நுழைவுத் தேர்வு மற்றும் எம் பிளான் படிப்புகளில் சேர்வதற்கான பொது நுழைவுத் தேர்வுகள் இன்று மற்றும் நாளை நடைபெற உள்ளது. இந்த தேர்வுகள் விழுப்புரம் அண்ணா பல்கலைக்கழக அரசு பொறியியல் கல்லூரி மைதானத்தில் நடைபெற இருக்கின்றது.
இதற்கு வரும் தேர்வர்களின் வசதிக்காக விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி காப்பகத்திற்கு அரசு பஸ் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் விழுப்புரம் அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி முதல்வர் செந்தில் தலைமையிலான குழுவினர் இந்த தேர்வுக்கான விரிவான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.
அதுமட்டுமின்றி இன்று காலை 10 மணி முதல் 12 மணி வரையில் எம்சிஏ தேர்வு பிற்பகல் இரண்டு முப்பது மணி முதல் 4.30 மணி வரை எம்பிஏ தேர்வு நடைபெறுகின்றது. அதேபோல் எம்இ, எம்ஆர், எம்டெக், எம்பிளான் போன்ற தேர்வுகள் நாளை காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரை நடைபெற உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.