
பொதுவாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் படங்களுக்கு ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவு எப்போதுமே கிடைக்கும். அதுவும் முன்னணி இயக்குனர்களின் படங்களில் ரஜினிகாந்த் நடிக்கிறார் என்றால் அந்தப் படங்கள் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வெற்றி பெறும். ரஜினிகாந்த்க்கு ஒரு பழக்கம் இருக்கு. அதாவது எப்பயுமே அவர் ஜெயிக்கிற குதிரையின் மேல் தான் பந்தயம் கட்டுவார்.
எந்த ஒரு இயக்குனரின் படமும் வெற்றி பெற்று விட்டால் அவரை உடனே அழைத்து அவரை பாராட்டி உங்களிடம் எனக்காக ஏதேனும் புது கதை இருக்கா? சொல்லுங்க நம்ம படம் பண்ணலாம் என்று வெற்றி பெற்ற இயக்குனரை பாராட்டி அவருக்கு வாய்ப்பும் கொடுப்பார். இந்த வகையில் தமிழ் சினிமாவில் இதுவரை தான் இயக்கிய எந்த படமும் தோல்வியே அடையாத இயக்குனரான லோகேஷ் கனகராஜை சந்தித்து அவருடன் கமிட்டாகி கூலி படத்தில் ரஜினிகாந்த் நடித்து முடித்து விட்டார்.
கூலி படத்தில் நடிகர் ரஜினிகாந்துடன் அமீர்கான்,நாகார்ஜுனா,உபேந்திரா போன்ற முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். படத்தில் லோகேஷ் கனகராஜ் உடன் பணியாற்றிய அமீர்கானுக்கு லோகேஷின் வேலைகள் மிகவும் பிடித்துப் போகவே லோகேஷ் உடன் ஒரு படம் பண்ண அமீர்கான் லோகேஷ் ஒப்பந்தம் செய்து விட்டார். அந்த அளவுக்கு கூலி படம் மிகவும் சிறப்பாக வந்துள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் கூலி படம் நிச்சயம் 1000 கோடி வசூல் செய்யும் என்று சினிமா வட்டாரங்களில் பேசத் தொடங்கி விட்டனர். கூலி படம் ஆகஸ்ட் மாதம் 14 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதே நாளில் தான் ரித்திக் ரோஷன் மற்றும் ஜூனியர் என்டிஆர் நடிப்பில் உருவாகும் WAR 2 திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
Yash Raj பிலிம்ஸ் இந்த படத்தை தயாரித்து உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியிட உள்ளனர். ஆகஸ்ட் 14 ஆம் தேதியிலிருந்து தொடர்ந்து 14 நாட்கள் வட மாநிலத்தில் உள்ள அனைத்து ஐமேக்ஸ் திரையரங்குகளிலும் வெளியாக வேண்டும் என்று Yash Raj பிலிம்ஸ் ஏற்கனவே ஒப்பந்தம் செய்து விட்டது.
இதனால் கூலி படத்திற்கு ஐமேக்ஸ் திரையரங்குகள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. 14 நாட்களுக்கு ஒரு திரையரங்கில் கூட கூலி படம் வெளியாக முடியாத அளவிற்கு Yash Raj பிலிம்ஸ் ஒப்பந்தம் போட்டுள்ளது. இதனால் கூலி படம் ஆயிரம் கோடி வசூலிக்குமா, வட மாநிலத்தில் கூலி படத்திற்கு போதுமான திரையரங்குகள் கிடைக்குமா என்கிற நிலை தற்போது எழுந்துள்ளது. இதனால் கூலி படக் குழுவினர் வருத்தத்தில் உள்ளனர்.