புதுச்சேரி மாநிலத்தில் படபபடவென உயரும் கொரோனா தொற்று!

0
131
#image_title

புதுச்சேரி மாநிலத்தில் 100ஐ கடந்த கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் மேலும் 104 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதுச்சேரியில் 65 நபர்களுக்கும், காரைக்காலில் 29 நபர்களுக்கும், ஏனாமில் 10 நபர்களுக்கும் என மொத்தம் 104 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

1048 நபர்களுக்கு செய்யப்பட்ட பரிசோதனையில் 104 நபர்களுக்கு உறுதி செய்யப்பட்ட நிலையில் தற்போது 416 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர் மேலும் காரைக்காலில் சார்ந்த 85 வயது முதியவர் கொரோனா தொற்றுக்கு உயிரிழந்துள்ளார்.

1 ஆண்டிற்கு பிறகு புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா தொற்று 100ஐ கடந்துள்ளது.

author avatar
Savitha