ஆரம்பமாகும் 18 வயதிற்க்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பனி!! சிறிது பதற்றத்தில் உள்ள இளைஞர்கள்!!

ஆரம்பமாகும் 18 வயதிற்க்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பனி!! சிறிது பதற்றத்தில் உள்ள இளைஞர்கள்!!

இந்தியாவில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வந்த நிலையில்  கடந்த ஆண்டு மார்ச் மாதம் நாடு முழுவதும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. 3 மாதம் ஊரடங்கு காரனமாக மாக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பதிக்கப்பட்டது. பிறகு  சிறிய தளர்வுகள்  ஏற்ப்பட்டு பொதுமக்களிடையே அச்சம் குறைந்த நிலையில் பொதுமக்கள் தங்களது அன்றாட வாழ்வை வாழ தொடங்கினர். தற்போது கொரோனா வைரஸ் மீண்டும் கோரத்தாண்டவம் எடுத்து வேகமாக பரவத் தொடங்கியுள்ளது.

இந்திய உட்பட பல நாடுகளில் இதன் கோரத்தாண்டவத்தால் மக்கள் பீதியில் உள்ளனர். தற்போது மக்களிடையே தீவிறமாக பரவி வருகின்றது கோரோன வைரஸின் 2 ஆம் அலை. இந்த 2 ஆம் அலை கொரோனா வைரஸ் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிக வீரியத்தை கொண்டுள்ளதால் மத்திய அரசு தற்போது பல கடுமையான கட்டுப்பாடுகளை கொண்டுவந்து உள்ளது. மேலும் மக்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி அவசியம் போட்டுக் கொள்ள வேண்டும் என மதிய அரசு மற்றும் சுகாதரத்துறை உத்தரவிட்டுள்ளது. இதனால் கொரோனா தடுப்பூசி போடும் பனி திவிரமடைந்து வருகின்றாது.

முதலில் தகுதியானவர்கள்  மட்டும் இந்த கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என கூறிய அரசு பிறகு வைரஸின் தாக்கம் அதிகமாக இருப்பதால் அனனவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இதைத் தொடந்து பிரதமர், முதலமைச்சர் போன்ற பல அரசியல் கட்சி தலைவர்களும், நடிகர்களும், பொதுமக்களும் இந்த கொரோனா தடுப்பூசியை எடுத்துக் கொண்டுள்ளனர். எனிலும் மக்களில் பலருக்கு கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொள்வதால் வாந்தி, மயக்கம், உடல்நலம் குறைதல் போன்ற பக்க வில்லைவுகள் ஏற்படுகிறது. கொரோனா தடுப்பூசி போடுவதால் சிலருக்கு கொரோனா தடுப்பூசி எமனாகக் கூட மாறி விடுகிறது. இதனால் பெரிதும் அச்சத்தில் உள்ள பொதுமக்கள் இந்த கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொள்ள மறுக்கிறார்கள். இந்த நிலையில் 18 வயதிற்க்கு மேற்பட்டவர்களுக்கு மே 1 ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தபடும் என மத்திய அரசு கூறியிருந்த நிலையில் நேற்று முதல் 18 வயதிற்க்கு மேற்பட்டவர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள முன் பதிவு ஆரம்பித்தது. நாளை அதாவது மே 1 ஆம் தேதி முதல் 18 வயதிற்க்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த பட உள்ளதால் இளைஞர்கள் சிறிது பதற்றத்தில் உள்ளனர்.

Leave a Comment