2021 ஜூலைக்குள் நாடு முழுவதும்  கொரோனா தடுப்பூசி! சுகாதாரத்துறை அமைச்சர் திட்டவட்டம்!

0
98

நாடு முழுவதும் ஆட்டம் காண வைத்துள்ளது கொரோனா  தோற்றால் மக்கள் தங்களது வாழ்வாதாரங்களை இழந்துள்ளனர்.

இதற்கு முடிவு காண வேண்டும் என்றால் நோய்க்கு தடுப்பு மருந்து கண்டு பிடிப்பதே ஒரே வழி. அப்படி இருக்கும் இந்த சூழ்நிலையில் உலக நாடுகள் அனைத்தும் போட்டிபோட்டுக்கொண்டு தடுப்பு மருந்துகளை கண்டுபிடித்து வருகிறது.

அதில் முதல்கட்டமாக ரஷ்யாவின் ஸ்புட்னிக்V  தடுப்பூசி இந்தியாவில் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. எனவே வரும் 2021 ஜூலைக்குள்  40-50 ஆயிரம் டோஸ்கள் நாடு முழுவதும்   உபயோகிப்பதற்காகவே மத்திய அரசு அதனை வாங்க முடிவெடுத்துள்ளது.

இதில் முதல் கட்டமாக கொரோனா  களப்பணியாளர்கள் 20-25 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்படும்.

மேலும் கொரோனா  தடுப்பூசி போடப்படுபவர்களின் பட்டியல் ஊராட்சி ஒன்றியத்தின் அடிப்படையில் இருந்து பெறப்படும் என்று  மத்திய சுகாதாரத் துறை  அமைச்சர் டாக்டர். ஹர்ஷ் வர்தன்  தனது பேட்டியின் மூலம் அறிவித்துள்ளார்.

 

 

author avatar
Parthipan K