கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து குணமான முதல் நோயாளி: சீனாவில் பரபரப்பு

0
53

சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதலால் சுமார் 2000 பேர் பலியாகி உள்ள நிலையில் இந்த வைரசை கட்டுப்படுத்த உலகில் உள்ள மருத்துவர்கள் மருந்து கண்டுபிடிக்கும் தீவிர முயற்சியில் இருந்தனர். பல நிறுவனங்களும் தனி நபர்களும் இந்த மருந்தை கண்டுபிடிக்க கோடிக்கணக்கில் நிதி உதவி அளித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் கேமரூனை சேர்ந்த மாணவர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தாக்குதல் ஏற்பட்டு இருந்த நிலையில் அவரை தனிமைப்படுத்தி சீன மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். அவருக்கு அளிக்கப்பட்ட மருந்துகளின் அடிப்படையில் அவர் கொஞ்சம் கொஞ்சமாக குணமாகி தற்போது முழுமையாக குணமாகி விட்டார் என்றும் இதனை அடுத்து அவருக்கு கொடுக்கப்பட்ட மருந்து கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் மருந்து தான் என்பதை உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்

இந்த மருந்தை இன்னும் ஆய்வு செய்து விரைவில் விற்பனைக்கு வரும் என்றும் இந்த மருந்தின் மூலம் கொரோனா வைரஸை முழுமையாக கட்டுப்படுத்தலாம் என்று சீன மருத்துவர்கள் கூறி வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

author avatar
CineDesk