6.30 லட்சத்துக்கு விலை போன ஆஸ்கர் நாயகனின் கோர்ட்! அப்படி என்ன சிறப்பு?

0
72
Court of Oscar Man worth Rs 6.30 lakh! What’s so special about that?
Court of Oscar Man worth Rs 6.30 lakh! What’s so special about that?

6.30 லட்சத்துக்கு விலை போன ஆஸ்கர் நாயகனின் கோர்ட்! அப்படி என்ன சிறப்பு?

பல புகழ் பெற்ற நாயகர்கள் தங்களின் விருதுகள் மற்றும் தங்கள் உடமைகளை ஏலத்திற்கு அனுப்புவது வழக்கம். குறிப்பாக கால்பந்து விளையாட்டு வீரர் ரொனால்டன் என்பவர் தனது விருதுகள் அனைத்தையும் ஏலத்தில் விடுவார். அதில் வரும் பணத்தை ஏழை எளிய மக்கள் மற்றும் குழந்தைகளை பாதுகாக்கும் ஆசிரமத்திற்கு வழங்குவார். இதனை வழக்கமாகக் கொண்டுள்ளார். அந்த வரிசையில் தற்பொழுது நமது ஆஸ்கர் நாயகனும் இடம் பெற்றுள்ளார். பெரும்பான்மையாக சினிமா பிரபலங்கள் பலர் ஏழை எளிய மக்களுக்கு உதவுவது வழக்கம்.ஆனால் பலர் தாங்கள் செய்யும் உதவிகளை வெளியே சொல்வது இல்லை.

பலர் தாங்கள் செய்யும் ஒன்று இரண்டு உதவிகளையே பெரிய அளவில் தெரிய படுத்திவிடுகின்றனர்.சோனு சூட் என்னும் நடிகர் தான் சாம்பாதிக்கும் பாதி பணத்தை ஏழை எளிய மக்களுக்கு உதவுவதிலேயே செலவிடுகிறார்.அதேபோல நமது சூர்யாவும் அகரம் பவுண்டேஷன் என்ற ஒன்றை நடத்தி அனைவரிடமும் பணம் வசூலித்து ஏழை குழந்தைகளை படிக்க வைத்து வருகிறார்.அந்தவகையில் நமது ஆஸ்கார் நாயகனும் ஸ்மைலி ஷாப் எனப்படும் ஓர் பவுண்டேஷன்க்காக தான் அணிந்திருந்த கோட்டை தற்பொழுது ஏலத்தில் விட்டுள்ளார்.

ஸ்மைலி ஷாப் என்பது மக்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் உபயோகித்த ஆடைகளை விற்கும் ஓர் கடை. அந்த பொருட்களை விற்பதன் மூலம் ஈட்டப்படும் பணத்தை ஏழை எளிய மக்களுக்கு கொடுத்து பயன்படுத்துவர் .இதனை அறிந்த நமது மியூசிக் மேஸ்ட்ரோ ஏ.ஆர்.ரஹ்மான் அவர் கான்செப்டில் அணிந்திருந்த ஓர் பிளேசர் ஒன்றை எழுத்தில் விடும்படி கொடுத்துள்ளார். அந்த பிளேசர் தற்பொழுது 6.75 ஏலம் போகியுள்ளது. இந்த பணத்தை அவர்களது சேரிட்டிக்கு எடுத்துக் கொள்ளும் படியும் கூறியுள்ளார்.