வேர்க்கடலையா… வெடிமருந்தா..? விமான நிலையத்தில் அதிர்ச்சியை உண்டாக்கிய கடத்தல் சம்பவத்தின் வைரல் வீடியோ..!!

0
87

வேர்க்கடலையா… வெடிமருந்தா..? விமான நிலையத்தில் அதிர்ச்சியை உண்டாக்கிய கடத்தல் சம்பவத்தின் வைரல் வீடியோ..!!

டெல்லியின் சர்வதேச விமான நிலையத்தில் வேர்க்கடலையில் வெளிநாட்டு பணத்தை நூதன முறையில் கடத்திய சம்பவம் அரங்கேறியுள்ளது. வெளிநாட்டிலிருந்து டெல்லி விமான நிலையம் வந்திறங்கிய விமான பயணிகளை வழக்கம் போல் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டனர்.

சோதனையின் போது முரட் ஆலம் என்னும் வெளிநாட்டு பயணியின் பையில் அயல்நாட்டு பிஸ்கட்டுகளும், வேர்க்கடலைகளும் இருப்பது சுங்கத்துறை அதிகாரிகளுக்கு சந்தேகத்தை கிளப்பியது. சந்தேகத்தின் பேரில் பயணியின் பொருட்களை தீவிர சோதனை செய்யப்பட்டது. வேர்க்கடலையை உரித்துப் பார்த்த போது அதில் வெளிநாட்டு படங்கள் சிறிய உருளையாக கட்டிவைக்கப்பட்டு இருந்தது. இதைப் பார்த்தவுடன் சுங்கத்துறை அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

மேலும், பிஸ்கட் பாக்கெட்டுகளையும் சோதனை செய்த போது, பிஸ்கட்டுகளின் நடுவே ஓட்டை போடப்பட்டு அதில் பணத்தை லாவகமாக அடைத்து கடத்தியது தெரிய வந்தது. கடத்தப்பட்ட பணங்களின் மதிப்பு 40 லட்சத்திற்கும் மேல் இருக்கும் என்று சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்தின் பிண்ணனி குறித்து விசாரணை நடந்து வருகிறது.

author avatar
Jayachandiran