இன்றைய ராசி பலன் 22.08.2020 Today Rasi Palan 22-08-2020

0
96

இன்றைய ராசி பலன்- 22.08.2020

நாள் : 22.08.2020

தமிழ் மாதம்:

ஆவணி 6, சனிக்கிழமை.

நல்ல நேரம்: 

காலை 7.45 மணி முதல் 8.45 மணி வரை, மாலை 4.45 மணி முதல் 5.45 மணி வரை.

இராகு காலம்:

பகல் 9.00 முதல் 10.30 வரை.

 எம கண்டம்: 

மதியம் 1.30 முதல் 3.00 வரை.

குளிகன்:

காலை 6.00 முதல் 7.30 வரை,

திதி:

சதுர்த்தி திதி இரவு 07.57 வரை பின்பு வளர்பிறை பஞ்சமி ஆகும்.

நட்சத்திரம்:

அஸ்தம் நட்சத்திரம் இரவு 07.11 வரை பின்பு சித்திரை.

இன்றைய நாள் முழுவதும் மரணயோகம் ஆகும். நேத்திரம் – 0. ஜீவன் – 1/2. விநாயகர் சதுர்த்தி. இன்று விநாயகர் வழிபாடு செய்வது நல்லது. இன்று வாஸ்து நேரம் மதியம் 03.19 மணி முதல் 03.55 மணி வரை

மேஷம்

மேஷ ராசிக்காரர்களே இன்று சுபசெலவுகள் உண்டாக வாய்ப்புள்ளது. உறவினர்களின் வருகை மனமகிழ்ச்சி தரும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். எடுத்த காரியம் அனைத்திலும் வெற்றி கிட்டும். பெற்றோரின் நன்மதிப்பை பெறுவீர்கள். மகிழ்ச்சியான நாள்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களே இன்று குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சினைகள் வரலாம். ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது. நண்பர்களுடன் வீண் வாக்குவாதங்கள் தோன்றும். சிந்தித்து செயல்பட்டால் தொழிலில் பெரிய பிரச்சினைகளை தவிர்க்கலாம். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. சிந்திக்க வேண்டிய நாள்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களே இன்று குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் வரும். சுபகாரிய முயற்சிகளில் தடைகள் ஏற்படலாம். தொழில் உள்ள கூட்டாளிகளினால் வரும் ஆலோசனைகள் மூலம் முன்னேற்றத்தை காணலாம். வேலையில் உழைப்பிற்கேற்ற பலன் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். உறவினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். முன்னேற்றமான நாள்.

கடகம்

கடக ராசிக்காரர்களே இன்று நீங்கள் அனைத்து செயலிலும் மனமகிழ்ச்சியுடன் ஈடுபாடு காட்டுவீர்கள். குடும்பத்தில் சுப நிகழ்வுகள் நடைபெறும். வியாபாரத்தில் கூட்டாளிகள் ஒற்றுமையோடு செயல்படுவார்கள். பணியில் உள்ளவர்களுக்கு திறமைக்கேற்ற புதிய வாய்ப்புகள் கிடைக்கும். ஆடை, ஆபரணம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். ஒற்றுமையான நாள்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களே இன்று குடும்பத்தில் அமைதி குறையும். உறவினர்களால் வீண் செலவுகள் வந்து சேரும். உத்தியோகத்தில் வேலை சுமை கூடும். எந்த ஒரு செயலிலும் பொறுமையை கடைபிடிக்க வேண்டும். பயணங்களால் உடல் சோர்வு ஏற்பட்டாலும் அனுகூலப் பலன்கள் உண்டாகும். பணப்பிரச்சினை தீரும். செலவுகள் வரும் நாள்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களே இன்று மகிழ்ச்சியான செய்திகள் வீடு தேடி வரும். தொழில் முன்னேற்றத்திற்கான உழைப்புகள் அனைத்திற்கும் நற்பலன் கிடைக்கும். வருமானம் இரட்டிப்பாகும். பிள்ளைகள் அன்புடன் நடந்து கொள்வார்கள். வேலையில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும்.

துலாம்

துலா ராசிக்காரர்களே இன்று தொழில் மற்றும் வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும்.உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு சற்று குறையும்.பணவரவு சுமாராக இருந்தாலும் வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். உடன் பிறந்தவர்கள் உதவியாக இருப்பார்கள்.குடும்பத்தில் பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படும். அமைதியான நாள்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களே இன்று குடும்பத்தில் கணவன் மனைவிக்கு இடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை கூடும். வியாபாரத்தில் அமோகமான லாபம் கிடைக்கும்.புதிய தொழில் தொடங்குவதற்கான பேச்சு வார்த்தைகளில் சாதகமான பலன் கிடைக்கும்.சுபமுயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களே இன்று விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்கும்.நண்பர்களின் சந்திப்பில் சந்தோஷம் கூடும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட லாபம் அதிகரிக்கும்.உங்கள் திறமைகளை வெளிபடுத்தும் நாளாக இந்த நாள் அமையும்.

மகரம்

மகர ராசிக்காரர்களே உங்களுக்கு இன்று சுபகாரிய பேச்சு வார்த்தைகளில் சாதகப் பலன் கிட்டும்.உங்களுக்கு மனகுழப்பம் அதிகமாகும். உத்தியோக ரீதியாக எடுக்கும் முயற்சிகளில் சற்று சிந்தித்து செயல்பட்டால் அனுகூலங்கள் உண்டாகும்.கூட்டுத் தொழில் செய்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்து செல்வது நல்லது.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களே இன்று திருமண சுபமுயற்சிகளை தள்ளி வைப்பது நல்லது.உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் வீண் அலைச்சல்கள் ஏற்படும்.தேவையில்லாத மனக்கவலைகள் தோன்றும்.அறிமுகம் இல்லாத நபர்களிடம் பேசுவதை தவிர்ப்பது உத்தமம். வண்டி வாகனங்களில் கவனம் தேவை.

மீனம்

மீன ராசிக்காரர்களே உங்களுக்கு உறவினர்கள் வருகையால் வீட்டில் சுபநிகழ்வுகள் நடைப்பெறும். பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் பெற்றோரின் அன்பை பெறுவீர்கள்.கொடுக்கல் வாங்கல் லாபகரமாக இருக்கும். பொன் பொருள் சேரும். தொழில் ரீதியாக அரசு வழி உதவிகள் கிடைக்கும்.

author avatar
Kowsalya