இந்த ராசிக்கு இன்று பூர்வீக சொத்துக்களால் லாபம் ஏற்படும்! இன்றைய ராசி பலன் 24-11-2020 Today Rasi Palan 24-11-2020

Photo of author

By Kowsalya

இந்த ராசிக்கு இன்று பூர்வீக சொத்துக்களால் லாபம் ஏற்படும்! இன்றைய ராசி பலன் 24-11-2020 Today Rasi Palan 24-11-2020

Kowsalya

 

இன்றைய ராசி பலன்- 24-11-2020

நாள் : 24-11-2020

தமிழ் மாதம்: 

கார்த்திகை 09, செவ்வாய்க்கிழமை,

நல்ல நேரம்: 

காலை 7.45 மணி முதல் 8.45 மணி வரை, மாலை 4.45 மணி முதல் 5.45 மணி வரை.

இராகு காலம்: 

மதியம் 3.00 முதல் 4.30 வரை

எம கண்டம்: 

காலை 9.00 முதல் 10.30 வரை

குளிகன்:

காலை 12.00 முதல் 1.30 வரை

திதி:

தசமி திதி பின்இரவு 02.42 வரை பின்பு வளர்பிறை ஏகாதசி

நட்சத்திரம்:

பூரட்டாதி நட்சத்திரம் பகல் 03.31 வரை பின்பு உத்திரட்டாதி

மரணயோகம் பகல் 03.31 வரை பின்பு அமிர்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1/2. முருக வழிபாடு நல்லது. புதிய முயற்சிகளை தவிர்க்கவும்

மேஷம்

மேஷ ராசிக்காரர்களே உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் கூடும். குடும்பத்தில் விட்டு கொடுத்து சென்றால் பிரச்சினைகளை தவிர்க்கலாம். நண்பர்கள் வழியாக உதவிகள் கிடைக்கும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். தெய்வ வழிபாடு மனதிற்கு நிம்மதியை தரும்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களே உங்களுக்கு மன அமைதி ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். நினைத்த காரியம் நினைத்தபடி நிறைவேறும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். உத்தியோகத்தில் சிலருக்கு தகுதிக்கேற்ற பதவி உயர்வு கிடைக்கும். வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். வருமானம் பெருகும்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களே குடும்பத்தில் சுப செலவுகள் செய்ய நேரிடும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். உத்தியோகத்தில் வேலைபளு அதிகரித்தாலும் உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பால் பணி சுமை குறையும். வியாபார ரீதியாக எடுக்கும் புதிய முயற்சிகளில் அனுகூலப் பலன் உண்டாகும்.

கடகம்

கடக ராசிக்காரர்களே நீங்கள் செய்யும் செயல்களில் தடை தாமதங்கள் ஏற்படலாம். உங்கள் ராசிக்கு காலை 08.52 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் கவனம் தேவை. மதியத்திற்கு பிறகு மன அமைதி உண்டாகும். உடல் ஆரோக்கியம் சீராகும். கொடுக்கல் வாங்கலில் இருந்த பிரச்சினைகள் குறையும்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களே உங்கள் ராசிக்கு காலை 08.52 மணிக்கு மேல் சந்திராஷ்டமம் இருப்பதால் எதிர்பாராத வீண் விரயங்கள் ஏற்படலாம். வியாபாரத்தில் பெரிய தொகையை முதலீடு செய்யாமல் இருப்பது நல்லது. வெளி இடங்களில் அறிமுகம் இல்லாத நபர்களிடம் தேவையில்லாமல் பேசுவதை தவிர்ப்பது உத்தமம்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களே நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். எதிரிகளின் பலம் குறைந்து உங்கள் பலம் கூடும். பெரிய மனிதர்களின் ஆதரவால் நன்மை கிடைக்கும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அவர்கள் உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்கும்.

துலாம்

துலா ராசிக்காரர்களே உங்களுக்கு பணவரவு தாரளமாக அமைந்து தேவைகள் அனைத்தும் நிறைவேறும். குடும்பத்தில் உள்ளவர்களுடன் ஒற்றுமை பலப்படும். சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். உடன் பிறந்தவர்கள் உதவியாக இருப்பார்கள். பூர்வீக சொத்துக்களால் லாபம் ஏற்படும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களே உங்களுக்கு வீண் மனக்குழப்பங்கள் உண்டாகும். உறவினர்களுடன் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். பணிபுரிபவர்களுக்கு வேலைபளு சற்று அதிகரிக்கும். எதிலும் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது. வியாபாரத்தில் போட்டி பொறாமைகள் சற்றே குறையும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களே நீங்கள் எதிலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். குடும்பத்தில் வீண் பிரச்சினைகள் உருவாகலாம். தேவையில்லாத செலவுகளால் கடன்கள் வாங்க வேண்டிய நிலை வரும். பிள்ளைகள் அனுகூலமாக இருப்பார்கள். பெரிய மனிதர்களின் ஆதரவு மனதிற்கு புது தெம்பை கொடுக்கும்.

மகரம்

மகர ராசிக்காரர்களே எந்த செயலிலும் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். கடினமான காரியத்தை கூட எளிதில் செய்து முடிக்கும் ஆற்றல் உண்டாகும். பணிபுரிபவர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிட்டும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகள் வெற்றி தரும். நண்பர்களால் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களே நீங்கள் சோர்வுடன் காணப்படுவீர்கள். பணவரவுகள் ஏற்ற இறக்கமாக இருக்கும். எதிர்பார்க்கும் உதவிகள் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். புதிய நபர்களிடம் சற்று எச்சரிக்கையுடன் பழகுவது நல்லது. சுப முயற்சிகளில் அனுகூலப் பலன்கள் உண்டாகும். தெய்வ வழிபாடு நல்லது.

மீனம்

மீன ராசிக்காரர்களே உங்களுக்கு உடல்நிலை மிக சிறப்பாக அமையும். சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். வியாபாரத்தில் செலவுகள் கட்டுகடங்கி இருக்கும். புதிய நவீன கருவிகள் வாங்கும் முயற்சிகள் வெற்றி தரும். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்களால் அனுகூலம் உண்டாகும்.