பேட்டை திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் திரைப்படத்தில் படத்தில் நடித்து முடித்து விட்டார். இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்துள்ளது அனிருத் இசையமைத்துள்ளார் இப்படத்தின் பாடல்கள் வெளிவந்து ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் வருகிற 9ம் தேதி வெளியிடப்படுகிறது வெளியே வெளியீடு பணிகள் மிக துரிதமாக நடைபெற்று வருகிறது
சூப்பர் ஸ்டாரின் ரஜினி படம் என்றாலே அவர்களின் ரசிகர்கள் பலவிதங்களில் கொண்டாடுகின்றனர்.
அவர் கட்டவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்வது, கட்டவுட்டுக்கு மாலை அணிவிப்பது போன்ற பல கொண்டாட்டங்கள் செய்து அவரின் படத்தின் வெளியீடு திருவிழா போல் கொண்டாடுவர்கள்.
இதன் உச்சகட்டமாக சேலம் ஏ ஆர் ஆர் எஸ் திரையரங்கு முன்பு ஹெலிகாப்டர் மூலம் மலர்தூவ அனுமதி அளிக்குமாறு சேலம் வட்டாட்சியரிடம் கனகராஜ் என்பவர் அனுமதி கேட்டிருக்கிறார். இது அனைவரிடமும் பெரும் பர பரப்பாக பேச பட்டு வருகிறது.