இருபது ஆண்டுகளாக அரசை ஏமாற்றும் டி.டி.வி.தினகரன் விளக்கம் கேட்டு அமலாக்கத்துறை நோட்டீஸ்

0
70

இருபது ஆண்டுகளாக அரசை ஏமாற்றும் டி.டி.வி.தினகரன் விளக்கம் கேட்டு அமலாக்கத்துறை நோட்டீஸ்

அந்நிய செலாவனி மோசயடி வழக்கில் அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் அவர்கள் 31 இலட்சம் ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் என 1998 ஆம் ஆண்டு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

இதனை எதிர்த்து டி.டி.வி.தினகரன் அவர்கள் உயர்நீதி மன்றம் மற்றும் உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார்.ஆனாலும் இரண்டு நீதிமன்றத்திலும் இவருடைய வழக்ஙு தள்ளுபடி செய்யப்பட்டு அபராதம் செலுத்தும் படி தீர்ப்பு வழங்கப்பட்டது. ஆனாலும் இதுநாள் வரையில் அந்த அபராதத்தொகையை அவர் செலுத்தாமல் அரசை ஏமாற்றி வருவதாக தெரிகிறது.

இதனை அடுத்து சென்னையை சார்ந்த நபர் ஒருவர் சென்னை உயர்நீதி மன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றை தொடர்ந்தார் அதில் இதுநாள் வரை டி.டி.வி.தினகரனிடம் அபராதம் வசூலிக்காத அமலாக்கத்துறை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்.

இன்று இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் இந்த வழக்கு குறித்து தங்களது கருத்துக்களை தெரிவிக்குமாறு டி.டி.வி.தினகரனுக்கு நோட்டீஸ் அனுப்புமாறு உத்தரவிட்டு தீர்ப்பை ஒத்திவைத்தனர்.

author avatar
Parthipan K