100 மான்களை கொன்ற வேட்டைக்காரருக்கு திரைப்படம் பார்க்கும் தண்டனை!

100 மான்களை கொன்ற வேட்டைக்காரருக்கு திரைப்படம் பார்க்கும் தண்டனை!

அமெரிக்காவில் உள்ள வேட்டைக்காரர் 100க்கும் மேற்பட்ட மான்களை சட்டவிதிமுறைகளை மீறி வேட்டையாடியதற்காக அவர் மாதம் ஒரு முறை ‘பாம்பி’ என்ற திரைப்படத்தை பார்க்க வேண்டும் என்ற தண்டனையை அந்நாட்டு நீதிமன்றம் அளித்துள்ளது. ‘பாம்பி’ என்பது காட்டில் வளரும் இளம் மானின் கதையை மையமாக கொண்ட ஒரு அனிமேஷன் திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது

அமெரிக்காவின் மிசோரி மாநிலத்தைச் சேர்ந்த டேவிட் பெர்ரி மற்றும் அவரது தந்தை, சகோதரர் ஆகிய மூவரும் அந்த பகுதியில் உள்ள மான்களை இரவு நேரங்களில் வேட்டையாடி, அவற்றின் தலைகளை எடுத்துக்கொண்டு உடலை விட்டுச்சென்ற்யுள்ளனர்.

இதையடுத்து கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் டேவிட் மற்றும் அவரது தந்தையும் சகோதரரும் கைது செய்யப்பட்டனர். மூவர் மீதும் கடந்த ஒரு ஆண்டாக வழக்கு நடந்த நிலையில் தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பில் மான்களை வேட்டையாடிய குற்றத்திற்காக டேவிட்டுக்கு ஒரு ஆண்டு சிறைத்தண்டனை வழங்கப்பட்டது. அவரது தந்தை மற்றும் சகோதரரின் வேட்டையாடும் உரிமத்தை வாழ்நாள் முழுவதும் ரத்து செய்து உத்தரவிட்டது.

இந்த நிலையில் சிறையில் ஒரு ஆண்டு தண்டனை அனுபவிக்கும் டேவிட், ஒவ்வொரு மாதமும் வால்ட் டிஸ்னியின் பாம்பி படத்தை பார்க்க வேண்டும் எனவும் தண்டனை வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Comment