வெள்ளத்தில் மூழ்கிய பேருந்து.! வெளியே வரமுடியாமல் உயிரிழந்த டிரைவர்

0
84

டெல்லி என்சிஆரில் பெய்த கனமழையில் மின்டோ பாலத்தின் கீழ் இரண்டு பேருந்துகள் மூழ்கியதில் ஒரு டிரைவர் உயிரிழந்துள்ளார். டெல்லியில் கனமழை பெய்து வருவதால் புது டெல்லி ரயில் நிலையம் அருகேயுள்ள பாலத்தில் கடும் வெள்ளம் ஏற்பட்டது.

இந்த விபத்தில் டிடிசி பேருந்து உட்பட 2 பேருந்துகள் வெள்ளத்தில் சிக்கிக் கொண்டன. இச்சம்பவத்தை அறிந்து பேருந்தில் இருப்பவர்களை மீட்கும் பணி நடந்தது. நீர் முக்கிய மிண்டோ பாலம் தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதைத் தொடர்ந்து ஒரு பேருந்து மட்டுமே இருந்த நிலையில் இரண்டாவது பேருந்து இருப்பதும் தெரியவந்தது.

டெல்லி, நொய்டா, குர்கான், என்சிஆர் போன்ற பகுதிகளில் பலத்த மழை பொழிந்துள்ளது. இன்று அதிகாலை கனமழை வெளுத்து வாங்கியதால் பல இடங்களில் பெருவெள்ளம் ஏற்பட்டுள்ளது. டெல்லியின் பல்வேறு பகுதிகளில் கனமழை பொழிவு குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் தனது ட்விட்டரில் எச்சரிக்கை விடுத்துள்ளது.

author avatar
Jayachandiran