பணத்தை வாங்கி தர கோரி! தீக்குளிக்க முயன்ற பெண் கைது!

0
79

விருதுநகர் அருகே பணத்தை வாங்கி தர கோரி தீக்குளிக்க முயன்ற பெண் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். 

விருதுநகர் மாவட்டம் சிவகாசி பகுதியை அடுத்த சாட்சியாபுரம் என்னும் கிராமம் அருகே  இந்திராநகர் ஏரியாவில் வசித்து வருபவர் ஆரோக்கியசாமி. இவருக்கு சொந்தமாக லாரி ஒன்று இருந்து வந்துள்ளது. அதை வைத்து பிழைப்பு நடத்தி வந்துள்ளார்.  இதற்குமேல் லாரி வைத்து ஓட்டி பிழைப்பு நடத்த விருப்பம் இல்லாததாலும், அதனை வாடகைக்கு விடுவதன் மூலம் அதிக லாபமும் கிடைக்கப் போவதில்லை என்பதாலும், அந்த லாரியை கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி பகுதியைச் சேர்ந்த ஜெயகணேஷ் என்ற நபரிடம் முன் பணத்தை வாங்கிக்கொண்டு விற்பனை செய்துள்ளார்.

ஆனால் ஜெயகணேஷ் முன்பணத்தோடு  நிறுத்திவிட்டு பேசியபடி, லாரிக்கான  முழு பணத்தொகையை தரவில்லை. இது குறித்து  ஆரோக்கியசாமி கேட்டபோதும், சரியான பதில் இல்லாததால், அவர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அவரது புகாரை ஏற்ற  காவல்துறை அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுப்பதற்கான வழிமுறைகளை மேற்கொண்டு வந்தனர்.

இவ்வாறு இருக்கையில், ஆரோக்கியசாமி மனைவி போதும் பொண்ணு என்பவர் பேசியபடி, விற்பனை செய்யப்பட்ட லாரிக்கான  முழு பணத்தையும் பெற்றுத்தருமாறு கோரிக்கை விடுத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயற்சி செய்துள்ளார். இதை  பணியில் இருந்த காவல்துறையினர் உடனடியாக பார்த்து அவரை தடுத்து நிறுத்தி காவல் நிலையம் அழைத்துச் சென்று அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.