மத்திய அரசின் கைக்கூலி அ. தி. மு. க. கனிமொழி?

0
234

குடியுரிமை சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் இன்று தி.மு.க சார்பில் போராட்டம் நடைபெற்று வருகிறது.

இதில், கலந்துகொண்டு பேசிய தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, பொருளாதார வீழ்ச்சி, விலைவாசி உயர்வு ஆகியவற்றை திசைத்திருப்பவே குடியுரிமை சட்டத் திருத்தத்தை பா.ஜ.க அரசு கொண்டு வந்துள்ளதாக கூறினார்.

குடியுரிமை மசோதாவை நிறைவேற்ற நாடாளுமன்றத்தில் பா.ஜ.கவுக்கு கைக்கூலியாக அ.தி.மு.க செயல்பட்டதாக கூறினார். இதை தமிழர்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள் என்றும் , பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தானில் இருந்து வரும் சீக்கியர்கள், இந்துக்களை குடிமக்களாக ஏற்கும் மத்திய அரசால், இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு வந்துள்ள தமிழர்களை ஏன் குடிமக்களாக அங்கீகரிக்க முடியவில்லை என கூறினார் .

மேலும், இந்த சட்டத்தை வாபஸ் பெரும்வரை தி.மு.கவின் போராட்டம் தொடரும் என்றார்.மேலும் மாநிலம் முழுவதும் தி.மு.க வினர் ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றனர்.

Previous articleதிட்ட மிட்டபடி உள்ளாட்சி தேர்தல் நடைபெறுமா?
Next articleதிருடியதாக கூறி இளைஞரை அடித்துக் கொன்ற பரிதாபம்?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here