சிராஜை திட்டி முனுமுனுத்த தீபக் சஹார்… சும்மா விடுவார்களா நெட்டிசன்கள்!

0
73

சிராஜை திட்டி முனுமுனுத்த தீபக் சஹார்… சும்மா விடுவார்களா நெட்டிசன்கள்!

இந்திய வீரர் சிராஜ் கேட்ச் பிடித்துவிட்டு எல்லைக் கோட்டை தொட்டதால் தீபக் சஹார் அவரை திட்டியது இணையத்தில் வைரல் ஆகியுள்ளது.

நேற்றைய இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான மூன்றாவது போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தது. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்க அணி 3 விக்கெட்கள் இழப்புக்கு 227 ரன்கள் சேர்த்தது.

அந்த அணியின் ரைலே ரோஸோ அபாரமாக விளையாடி 47 பந்துகளில் சதம் அடித்து கலக்கினார். மற்றொரு வீரரான குயிண்டன் டிகாக் அவருக்கு உதவியாக அரைசதம் அடித்தார். இந்திய பந்துவீச்சாளர்கள் யாருடைய பந்துவீச்சும் நேற்று எடுபடவில்லை. குறிப்பாக ஹர்ஷல் படேல் மற்றும் அஸ்வின் ஆகியோர் ஓவர்களை தென் ஆப்பிரிக்க வீரர்கள் வெளுத்து வாங்கினர்.

இந்த போட்டியில் தீபக் சஹார் வீசிய பந்தை தென் ஆப்பிரிகக் வீரர் மில்லர் அடிக்க அது எல்லைக் கோட்டை நோக்கி சென்றது. அந்த பந்தைக் கேட்ச் பிடித்த சிராஜ் பவுண்டரி லைனை மிதித்து விட்டதால் அது சிக்ஸராக அறிவிகக்பப்ட்டது. இதனால் பந்து வீசிய சஹார் சிராஜ் மீது அதிருப்தி அடைந்து முனுமுனுத்தார்.

போட்டி முடிந்ததும் இந்த வீடியோவை பரப்பிய ரசிகர்கள் தீபக சஹார் கெட்டவார்த்தை சொல்லி சிராஜை திட்டியதாகவும், அது என்ன வார்த்தை என்றும் கமெண்ட்களை பதிவிட்டு வருகின்றனர். ஆட்டத்தின் போக்கில் இதுபோல வீரர்கள் கோபமடைவதும், சில வார்த்தைகளை அதிகப்படியாக பிரயோகிப்பதும் வாடிக்கையான ஒன்றுதான்.