நான் நிர்வாண படத்தில் நடித்தேனா!!? நடிகையும் அமைச்சருமான ரோஜா கண்ணீர் மல்க வெளியிட்ட வீடியோ இணையத்தில் வைரல்!!!

0
74
#image_title

நான் நிர்வாண படத்தில் நடித்தேனா!!? நடிகையும் அமைச்சருமான ரோஜா கண்ணீர் மல்க வெளியிட்ட வீடியோ இணையத்தில் வைரல்!!!

நிர்வாண திரைப்படத்தில் நடித்ததாக எழுந்த கருத்திற்கு நடிகையும் அமைச்சருமான ரோஜா அவர்கள் தற்பொழுது கண்ணீர் மல்க பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தெலுங்கு தேசம் கட்சியின் முன்னாள் அமைச்சரும் மூத்த தலைவருமான பண்டாரு சத்திய நாராயண மூர்த்தி அவர்கள் நடிகையும் ஆந்திர மாநில சுற்றுலாதுறை அமைச்சருமான ரோஜா அவர்களை பற்றி இழிவான கருத்துக்களை தெரிவித்து இருந்தார். இது ஆந்திர மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் ஆந்திரமாநில சுற்றுலாத்துறை அமைச்சர் ரோஜா அவர்கள் திருப்பதியில் உள்ள அவருடைய வீட்டில் கண்ணீர் மல்க பேட்டி அளித்துள்ளார். அமைச்சர் ரோஜா அவர்கள் அளித்த பேட்டியில் “நான் நிர்வாகத் திரைப்படத்தில் நடிப்பதாக கூறி என்னை அனைவரும் சித்திரவதை செய்கின்றனர். ஆனால் அந்த திரைப்படத்தில் இருப்பது நான்தான் என்று இன்னும் நிரூபிக்கப்படவில்லை.

பெண்கள் அனைவரும் தங்கள் விருப்பப்படி வாழ்வதற்கு உரிமை உள்ளது என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. என்னை மதிப்பிடுவதற்கு நீங்கள் யார்? தெலுங்கு தேசம் கட்சியானது பெண்களை விளையாட்டு பொருளாக நடத்துகின்றது.

உங்கள் வீட்டில் இருக்கும் பெண்களை பற்றி தவறாக பேசினால் நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா? அமைச்சர்களாக இருந்த காந்தா ஸ்ரீனிவாஸ், அய்யண்ணபத்ரா, லோகேஷ், சந்திரபாபு நாயுடு அனைவரும் கண்டிக்காதது ஏன்? தெலுங்கு தேசம் கட்சி ஒரு திரையுலக பிரமுகர்கள் நிறுவப்பட்ட கட்சி ஆகும்.

பண்டாரு சத்ய நாராயணன் அவர்கள் கூறிய கருத்துக்கு அவருடைய மனைவி அவரின் கண்டத்தில் அரைந்திருக்க வேண்டும். ஆனால் அரையாதது ஏன்? முன்னாள் அமைச்சர் லோகேஷ் சிறிதளவு கூட வெட்கமே இல்லாமல் டுவீட் செய்கிறார்.

சந்திரபாபு நாயுடு அவர்கள் என்னை ஏன் பிரச்சாரத்திற்கு அழைத்தார்? நான் கெட்டவன் என்றால் என்னை ஏன் கட்சியில் சேர்த்தனர்? என்னை அயர்ன் லெக் என்று எல்லாரும் கேலி செய்தார்கள். உங்கள் கட்சியில் இருக்கும் பொழுது நான் நல்லவர். அதுவே வேறு கட்சியில் இருக்கும் பொழுது கெட்டவரா? அது எப்படி?

பண்டாரு சத்ய நாராயண மூர்த்தி அவர்கள் தெரிவித்த கருத்து என்னை மிகவும் புண்படுத்தி விட்டது. நான் கேள்வி கேட்டால் என்னை தாக்கி பேசுவார்களா? சந்திரபாபு நாயுடு அவர்களை கைது செய்த பொழுது எதற்காக அழுதீர்கள்.

தெலுங்கு தேசம் கட்சியில் பெண்களுக்கு சிறிதளவும் கூட மரியாதை இல்லை. தெலுங்கு தேசம் கட்சியால் அரசியலில் வளர்ச்சி அடைய முடியாது. அவதூறாகவும் மனதை புண்படுத்தும் வகையில் பேசிய பண்டாரு சத்ய நாராயண மூர்த்தி அவர்களின் மீது நான் மானநஷ்ட வழக்கு தொடரவுள்ளேன்” என்று அமைச்சர் ரோஜா அவர்கள் அழுதுகொண்டே பேட்டி அளித்துள்ளார்.

இந்நிலையில் அமைச்சர் ரோஜா அவர்கள் அழுதபடி பேட்டி அளித்த இந்த வீடியோ இணையதளத்தில் வைரலாக பரவி வருகின்றது. இந்நிலையில் அமைச்சர் ரோஜா அவர்களை குறித்து அவதூறாக கருத்து தெரிவித்த பண்டாரு சத்ய நாராயண மூர்த்தி அவர்களின் மீது காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். ஆந்திர மாநிலத்தில் பெண் அமைச்சர் ஒருவர் அழுதபடி பேட்டியளித்த இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றது.