பிரபல நடிகர் மற்றும் இயக்குனரான பாக்யராஜ் தன்னுடைய சினிமா வாழ்க்கையை துவங்கிய பொழுது அவருக்கு ஏற்பட்ட காதல் மற்றும் அவருடைய முதல் மனைவி குறித்து பத்திரிக்கையாளர் சபிதா ஜோசப் தி ரியல் ஒன் youtube சேனலுக்கு பேட்டி அளித்திருக்கிறார்.
Youtube சேனல் பேட்டியில் சபிதா ஜோசப் தெரிவித்திருப்பதாவது :-
தமிழ் சினிமா துறையில் நடிக்க வந்த பொழுது நடிகை பிரவீனாவுக்கு தமிழ் தெரியாது என்றும் அவருக்கு தமிழ் கற்றுக் கொடுப்பதற்காக பழகத் தொடங்கிய பாக்கியராஜ் அவர்களுக்கும் நடிகை பிரவீனா அவர்களுக்கும் இடையே காதல் மலர பிரவீனா கதாநாயகியாக படங்களில் நடிக்க துவங்கினார் பாக்யராஜையும் நன்றாக பார்த்துக் கொண்டார்.
இப்படி இருக்கக்கூடிய சூழ்நிலையில் பாரதிராஜா உடன் வேலை பார்ப்பதற்கான வாய்ப்பு பாக்கியராஜ் அவர்களுக்கு கிடைக்கவே வேலையையும் பிரவீனாவையும் இரு கண்களாக தொடர்ந்து கவனித்து வந்திருக்கிறார். அசிஸ்டன்ட் டைரக்டரில் இருந்து இயக்குனர் ஆச சுவரில்லா சித்திரங்கள் திரைப்படத்தின் மூலமாக அறிமுகமாகி கொஞ்சம் கொஞ்சமாக தன்னுடைய இயக்குனர் கனவை நினைவாக்கியுள்ளார் பாக்யராஜ். அதன் பெண் தங்களுடைய காதல் விவகாரம் குறித்த எம்ஜிஆரிடம் சொல்ல அவரும் இவர்கள் இருவருக்கும் திருமணத்தை நடத்தி வைத்திருக்கிறார்.
திருமணம் ஆனதிலிருந்து இவர்களுக்கிடையில் குழந்தை பிறக்கவில்லை என்றாலும் இவர்களுடைய வாழ்க்கை நல்லபடியாக சென்று கொண்டிருந்த நிலையில் திடீரென நடிகை பிரவீனாவிற்கு மஞ்சள் காமாலை ஏற்படவே பாக்யராஜ் அவர்களுக்கு பூர்ணிமா உடன் நெருக்கம் ஏற்பட்டு காதலாக மலர்ந்தது. இந்த விஷயம் பிரவீனா அவர்களுக்கு தெரிந்தவுடன் மிகவும் வருத்தப்பட்டு இருக்கிறார். பிரவீனாவின் உடைய சொத்து அனைத்தும் பாக்யராஜ் அவர்களுக்கு வந்து சேர்ந்தது.பிரவீனா உடல் நலக்குறைவால் இறந்து போகவே அதன் பெண் பாக்கியராஜ் பூர்ணிமாவுடன் இரண்டாவது திருமணம் செய்து கொண்டதாகவும் அந்த இரண்டாவது திருமணத்தையும் எம்ஜிஆர் தலைமையில் தான் நடைபெற்றது என்றும் தெரிவித்திருக்கிறார்.