சிறைதண்டனை பற்றி தன்னிலை விளக்கம் அளித்த பிரபல இயக்குனர் லிங்குசாமி!

0
92

சிறைதண்டனை பற்றி தன்னிலை விளக்கம் அளித்த பிரபல இயக்குனர் லிங்குசாமி!

இயக்குனர் லிங்குசாமி பிவிபி பிலிம்ஸ் நிறுவனத்துக்கு அளிக்க வேண்டிய பணத்துக்காக அளித்த காசோலைகள் பவுன்ஸ் ஆனதால் அவர் மீது 2016 ஆம் ஆண்டு வழக்கு தொடுக்கப்பட்டது. அந்த வழக்கில் இப்போது அவருக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்து சைதாபேட்டை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கடந்த 2014 ஆம் ஆண்டு தெலுங்கு தயாரிப்பு நிறுவனமான பிவிபி பிலிம்ஸ் நிறுவனத்திடம் லிங்குசாமி தான் தயாரித்து இயக்கும் ‘எண்ணி ஏழே நாள்’ என்ற திரைப்படத் தயாரிப்பிற்காக 1.03 கோடி ரூபாய் கடனாக பெற்றதாக சொல்லப்படுகிறது. அந்த படத்தில் கார்த்தி மற்றும் சமந்தா நடிக்க இருந்தனர். ஆனால் அந்த படம் தொடங்கப்படவே இல்லை. இதைடுத்து வழக்கு தொடரப்பட்ட நிலையில்தான் அவர் அளித்த காசோலைகள் பவுன்ஸ் ஆகியுள்ளன.

இந்த தீர்ப்பானது தமிழ் சினிமா ரசிகர்கள் மற்றும் சினிமா உலகினர் மத்தியில் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இதுபற்றி தன்னிலை விளக்கம் அளித்து இயக்குனரும் தயாரிப்பாளருமான லிங்குசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் “இன்று ஊடகங்களில் பரபரப்பாக வரும் என்னை பற்றிய ஒரு செய்திக்கு தன்னிலை விளக்கம் அளிக்க வேண்டியது என் கடமை. இந்த வழக்கு பிவிபி கேப்பிட்டல் லிமிடெட் மற்றும் எங்களது தயாரிப்பு நிறுவனமான திருப்பதி பிரதர்ஸ் பிலிம் மீடியா லிமிடெட் இடையிலானது. அவர்கள் தொடுத்த வழக்கின் மேல் மாண்புமிகு நீதிமன்றம் தீர்ப்பு அபளித்துள்ளது. நாங்கள் மாண்புமிகு நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்புக்கு எதிராக உடனடியாக மேல்முறையீடு செய்து சட்டரீதியாக சந்திக்க உள்ளோம்” எனக் கூறப்பட்டுள்ளது.