உங்கள் எண்ணம் ஒருபோதும் நிறைவேறாது: பா ரஞ்சித்

0
81

உங்கள் எண்ணம் ஒருபோதும் நிறைவேறாது: பா ரஞ்சித்

கடந்த இரண்டு நாட்களாக விடுதலைச்சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் இந்து கோவில்கள் குறித்து பேசிய சர்ச்சை குறித்து பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக நடிகை காயத்திரி ரகுராம் தனது டுவிட்டர் பக்கத்தில் திருமாவளவனை சர்ச்சைக்குரிய வார்த்தைகளை பயன்படுத்தி விமர்சனம் செய்து வந்ததால் அவருடைய டுவிட்டர் கணக்கு முடக்கப்பட்டது

காயத்ரி ரகுராம் மட்டுமின்றி எஸ்வி சேகர் உள்பட பலர் திருமாவளவனை தனிப்பட்ட முறையிலும் அரசியல் ரீதியிலும் விமர்சனம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் திருமாவளவன் மீதான விமர்சனம் குறித்து இயக்குனர் பா ரஞ்சித் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது:

ஒரு கருத்தையொற்றி எதிர்வைக்கப்படும் விமர்சனம் விவாதத்தை ஏற்படுத்த வேண்டும். ஆனால் இங்கு விமர்சனங்களாக வசைகள், தனிமனித தாக்குதல்கள் மற்றும் அவதூறு நிகழ்த்தப்படுவது இவர்களுக்கு பண்பாடாகவே இருக்கிறது. அண்ணன் #திருமா அவர்களை தரம்தாழ்த்தும் பிற்போக்காளர்கள் எண்ணம் ஒருபோதும் ஈடேறபோவதில்லை!
என்று குறிப்பிட்டுள்ளார்.

ரஞ்சித்தின் இந்த திட்டத்திற்கு ஆதரவு மற்றும் எதிர்ப்பு கருத்துக்கள் நெட்டிசன்கள் இடையே பதிவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

author avatar
CineDesk