வாட்ஸ் அப் ஸ்டேட்டசால் வந்த விபரீதம்! அரிவாளால் வெட்டிய வெறித்தனம்!

0
61
Disaster by WhatsApp Status! The scythe-cut frenzy!
Disaster by WhatsApp Status! The scythe-cut frenzy!

வாட்ஸ் அப் ஸ்டேட்டசால் வந்த விபரீதம்! அரிவாளால் வெட்டிய வெறித்தனம்!

கள்ளக்காதல் செய்பவர்கள் அவர்களாக திருந்தினால் தவிர நம்மால் எதுவும் செய்ய முடியாது.நாம் தினமும் எவ்வளவோ விஷயங்கள் பார்த்தாலும் பல விஷயங்கள் நம் மனதை என்னவோ செய்கிறது.

பெங்களூரில், சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் குண்டலுபேட்டை தாலுகா பீமனபீடு கிராமத்தை சேர்ந்தவர் சிவண்ணா, விவசாயி, இவரது மனைவி சவுபாக்யா.இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர்.

இந்த நிலையில் சவுபாக்யாவிற்கு வேறு ஒரு ஒரு நபருடன் பழக்கம் ஏற்பட்டு நாளைடைவில் அது கள்ள காதலில் முடிந்துள்ளது.அதனை தொடர்ந்து அவருடன் அடிக்கடி தொடர்பில் இருந்து உல்லாசம் அனுபவித்து உள்ளார்.

சிவண்ணா வீட்டில் இல்லாத நேரங்களிலும் இதைபோல் அடிக்கடி உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர்.இதனை தொடர்ந்து இந்த காதல் விவகாரம் நாளடைவில் சிவண்ணாவிற்கு தெரிய வந்துள்ளது.

அதன் காரணமாக தன் மனைவியையும், பசவராஜையும் கண்டித்து உள்ளார்.ஆனால் அவர்கள் இதை கண்டு கொண்டதாக தெரியவில்லை.மீண்டும் நேற்று முன்தினம் சிவண்ணா விவசாய தோட்டத்திற்கு காவலுக்கு சென்றிருந்த நேரம் தன் கள்ள காதலனை வீட்டிற்கு அழைத்து உல்லாசம் அனுபவித்துள்ளார்.

அந்த சமயத்தில் பசவராஜ் மற்றும் கவுசல்யாவும் மிக நெருக்கமாக முத்தம் கொடுத்துள்ளனர்.அதை புகைப்படம் எடுத்து பசவராஜ் அவரது செல்போன் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் அப்டேட் செய்துள்ளார்.

அதை தொடர்ந்து இருவரும் மீண்டும் அவர்களது பணியை தொடர்ந்துள்ளனர்.அந்த ஸ்டேட்டசை பார்த்து பலரும் அதிர்ச்சியடைந்து சிவண்ணாவிடம் தெரிவித்து அந்த ஸ்டேட்டசையும் காண்பித்து உள்ளனர்.

அவரும் அதை பார்த்து அதிர்ச்சியடைந்து உடனே வீட்டிற்கு வந்த அவர் இவர்கள் செய்த செயலை பார்த்து செய்வதறியாது திகைத்த நின்று, பின் தனது மனைவி மற்றும் பசவராஜை சரமாரியாக அடித்து உதைத்தார்.

மேலும் வீட்டில் கிடந்த அரிவாளை எடுத்து பசவராஜை சரமாரியாக, ஆத்திரம் தீரும் வரை வெட்டி சாய்த்தார்.இதில் பசவராஜ் அதே இடத்தில் இரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்து உயிரிழந்தார்.

இந்த படுகொலையை பார்த்த அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்து குண்டலுபேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

மேலும் போலீசார் அவரை கைது செய்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

தன் மனைவியுடன் உல்லாசமாக இருந்த ஒருவனை, அதை ஸ்டேட்டஸில் வைத்த கள்ள காதலனை அரிவாளால் வெட்டிய சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.