“பல நாள் திருடர்கள் ” – திஷா கொலை குற்றவாளிகள் பற்றி திடுக்கிடும் தகவல்கள்

0
141

நாடுமுழுவதும் பெரும் அதிர்வை ஏற்படுத்திய ஐதராபாத் பெண் மருத்துவர்  திஷா (பெயர் மாற்றப்பட்டுள்ளது ) கொலை வழக்கு விசாரணையில் மேலும் பல அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்துள்ளன.

இந்த கொலை வழக்கில் கைதான நான்கு பேரில் இருவர் திஷாவை  கொலை செய்வதற்கு முன்னதாக பல்வேறு காலகட்டங்களில் இதே முறையில் ஒன்பது பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து எரித்து கொலை செய்தது தெரியவந்துள்ளது.

அனைத்து கொலைகளும் மகபூப் நகர், சங்காரெட்டி, ரங்காரெட்டி, ஐதராபாத்,  கர்நாடகா உள்ளிட்ட பகுதிகளிலுள்ள தேசிய நெடுஞ்சாலைகளுக்கு அருகிலேயே நடந்துள்ளன.

இந்த குற்றவாளிகளை என்கவுண்டரில் சுட்டு கொள்வதற்கு முன்பு நடந்த விசாரணையில்தான் இந்த விவரங்கள் தெரியவந்துள்ளன.

Previous articleடிரம்ப் பதவி நீக்க தீர்மானம் வெற்றி: அமெரிக்காவில் பரபரப்பு
Next articleவாழ்வை வளமாக்கும் அஷ்டமி சப்பரம் இன்று ?