திமுகவின் கனவிற்கு ஆப்பு வைத்த ஆடிட்டர் குருமூர்த்தி! அதிர்ச்சியில் திமுக!

0
101

ரஜினி தனியாக அரசியல் கட்சி ஆரம்பிப்பது என்ற முடிவில் இருந்து பின்வாங்கி இருக்கின்ற நிலையில், ஆடிட்டர் குருமூர்த்தி இன்னொரு அரசியல் வியூகத்துடன், 2021 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்கு ரெடியாகி வருவதாக, தகவல் வெளியாகி இருக்கின்றது.

இப்போதுள்ள சூழ்நிலையில், தமிழக அரசியல் களத்தில் அதனை தீர்மானம் செய்யக்கூடிய மிக முக்கிய நபர்களில் ஒருவராக இருப்பவர் துக்ளக் பத்திரிகையின் ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்தி,

ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னால் இவர் நினைத்தபடி தான் அரசியல் அமைந்தது என்பது குறிப்பிடத்தக்க ஒன்று.

சசிகலா அவர்கள் முதலமைச்சர் பதவியை ஏற்க விடாமல் முட்டுக்கட்டை போட்டதில் மிக முக்கிய பங்கு வகித்தவர் ஆடிட்டர் குருமூர்த்தி என்று சொல்கிறார்கள்.

அதுமட்டுமன்றி ஓ பி எஸ் ஐ சசிகலாவுடன் மோதவிட்டு அதிமுகவை பிரித்து பின்பு அவர்களை ஒன்றாக இணைத்ததிலும் , இவரின் பங்கு மிக முக்கியமானது என்று தெரிவிக்கிறார்கள்.

இவ்வாறு தமிழக அரசியல் களத்தில் அதிகாரம் மிக்க ஒரு நபராக வலம் வரும் ஆடிட்டர் குருமூர்த்தியை பொருத்தவரையில், அவருக்கு இரண்டு லட்சியங்கள் மட்டுமே இருக்கிறது என்று சொல்கிறார்கள்.

சசிகலா தரப்பினர் மீண்டும் அதிகாரத்திற்கு வந்து விடக்கூடாது என்பதும் மற்றொன்று திமுக ஆட்சி தமிழகத்தின் மறந்துவிட கூடாது என்பதும் ஆகும்.

இந்த நிலையில், ரஜினி அரசியல் பிரவேசம் செய்து தனியாக கட்சி தொடங்கினால், ஆளும் தரப்பிற்கு எதிரான வாக்குகள் அவருக்கு சென்று விடும் என்ற காரணத்தால், இதன் வழியாக திமுக ஒரு பின்னடைவை சந்திக்கும் என்பது ஆடிட்டர் குருமூர்த்தியின் வியூகமாக இருந்து வந்தது.

அதோடு ரஜினி தலைமையில், ஒரு வலுவான கூட்டணி அமையுமானால், அது தேர்தல் சமயத்தில், திமுக கூட்டணியை நீர்த்துப்போகச் செய்யும் வாய்ப்பும், இருக்கிறது. என்றும் அவர் நம்பி இருக்கிறார்.

இதன் காரணமாக வெளிப்படையாகவே சில நேரங்களில், ரஜினிக்கு வெளிப்படையாகவே ஆடிட்டர் குருமூர்த்தி ஆதரவளித்து இருக்கின்றார்.

இப்போது தமிழக சட்டமன்றத் தேர்தலில், திமுக அணி ஒரு வலிமையானதாக இருக்கின்றது. அதிமுகவிடம் கூட்டணி பலம், மக்கள் ஆதரவு, போன்றவை திமுகவுடன் ஒப்பிடும்போது குறைவாகவே இருக்கின்றது.

ஆகவே இந்த நேரத்தில், ரஜினி போன்ற ஒரு நபர் அதிமுகவுக்கு ஆதரவு தெரிவிப்பது, இல்லை என்றால், இன்னொரு அணியை உருவாக்குவது, இது போன்ற செயலில் ஈடுபட்டால், அந்த செயல் திமுகவை பலவீன படுத்துவதற்கான வாய்ப்பாக இருக்கும். என்று ஆடிட்டர் குருமூர்த்தி நம்புவதாக சொல்லப்படுகிறது.

ஆகவே தற்போது அதே ஸ்டைலில் தான் ரஜினியை பகடைக் காயாக வைத்து கட்டம் கட்டி வருகிறார் ஆடிட்டர் குருமூர்த்தி.