லோன் வாங்கித்தருவதாக சொல்லி மக்களை ஏமாற்றிய திமுகவினர்!

Photo of author

By Rupa

லோன் வாங்கித்தருவதாக சொல்லி மக்களை ஏமாற்றிய திமுகவினர்!

Rupa

கடந்த சில நாட்களுக்கு முன்னர் அதிக இளைஞர்கள் மற்றும் பெண்கள் தாங்கள் தவெக கட்சியில் இருந்து விலகுவதாகவும், தவெகவில் தங்களுக்கு போதுமான அங்கீகாரம் கிடைக்காததால் தவெவில் இருந்து விலகி திமுக கட்சியில் தங்களை இணைத்துக்கொள்வதாகவும், தவெக கட்சி துண்டு மற்றும் கொடியை தூக்கி எரிவதை போலவும், தவேக உறுப்பினர் அடையாள அட்டையை கிழித்தெறிவதை போலவும் வீடியோ வெளியாகி வைரலானது.

இவர்கள் அனைவரும் தவெகவில் இருந்து வெளியேறி திமுகவில் தங்களை இணைத்துக்கொண்டதை போல வீடியோ வெளியானது. இந்த வீடியோ உண்மை என நினைத்து நிறைய பேர் சமூக வலைத்தளங்களில் பரவ செய்தனர். இந்நிலையில் இந்த விடீயோவின் உண்மை முகம் தற்போது தெரியவந்துள்ளது.

அதாவது திருவொற்றியூரில் லோன் வாங்க சென்ற மக்களை உங்களுக்கு லோன் ஏற்பாடு செய்கிறோம் என்று சொல்லி திமுகவினர் அழைத்து சென்று இந்த மாதிரி வீடியோ எடுக்கணும், அதுக்கு இந்த மாதிரி எல்லாம் பண்ணுங்க என்று வற்புறுத்தியுள்ளனர்.

அங்கே சென்ற மக்களும் வேறு வழியே இல்லாமல் இந்த செயலை செய்துள்ளனர். அங்கு சென்ற மக்களே இன்று இந்த விடீயோவின் உண்மை நிலை குறித்து பேட்டி கொடுத்துள்ளனர்.

எங்களுக்கு வேற வலி தெரியல, அதே மாறி அந்த இடத்தை விட்டு எங்களால் நகரக்கூட முடியல, சுத்தியும் திமுக கட்சிக்காரங்க நின்னாங்க, அதனால வேறு வழியே இல்லாம அந்த வீடியோவில் அவங்க சொன்ன படி நடித்து முடித்தோம் என்று பேட்டி கொடுத்துள்ளனர்.