மேயர் கொலை வழக்கில் திமுக பெண் பிரமுகர் கணவருடன் கைது! திடுக்கிடும் தகவல்கள்

Photo of author

By Parthipan K

மேயர் கொலை வழக்கில் திமுக பெண் பிரமுகர் கணவருடன் கைது! திடுக்கிடும் தகவல்கள்

நெல்லை மாநகராட்சியின் முதல் பெண் மேயர் உமாமகேஸ்வரி வயது 62. அவரது கணவர் முருகசங்கரன் வயது 71. கடந்த ஜூலை மாதம் 23-ம் தேதி இவர்கள் வீட்டில் இருந்தபோது மர்ம நபர்களால் வெட்டி கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டனர்.

அப்போது வீட்டில் இருந்த மாரி என்ற பணிப்பெண்ணும் கொடூரமான முறையில் அடித்துக் கொல்லப்பட்டார். இந்த கொலை சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அரசியல் வட்டாரத்தில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது,.

நகை பணத்திற்காக கொள்ளையர்கள் கொலையை செய்திருக்கலாம் என்று முதலில் காவல்துறையின் சந்தேகப்பட்டனர். இது தொடர்பாக மூன்று தனிப்படை போலீசார் பல கோணங்களில் கொலையாளியை கண்டுப்பிடிக்க விசாரணையை மேற்கொண்டனர்.

கூடவே, அரசியல் போட்டி காரணமாக கூலிப்படையை அனுப்பி யாராவது கொலை செய்திருக்கலாம் என்ற சந்தேகமும் போலீசாருக்கு ஏற்பட்டது.

இதையடுத்து, உமா மகேஸ்வரி கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. அவர்களது தீவிர விசாரணையில் திமுக பெண் பிரமுகர் சீனியம்மாள் மகன் கார்த்திக்கை கைது செய்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் அவர் தான் அரசியல் பொறாமை காரணமாக கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.
இந்நிலையில், நெல்லை முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி கொலை வழக்கில் தி.மு.க. பிரமுகர் சீனியம்மாள், அவரது கணவர் சன்னாசி ஆகியோரை சிபிசிஐடி போலீசார் இன்று கைது செய்தனர். மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவரலாம் என்று தெரிகிறது.