தளபதியாரே அவங்கள விடுங்க முதல்ல எங்களுக்கு பதில் சொல்லுங்கள்! எகிறிய இளைஞர்கள் கடுப்பாக்கிய ஸ்டாலின்!

0
137

விரைவில் சட்டசபை தேர்தல் வரவிருப்பதால் தமிழகத்தில் இருக்கின்ற அரசியல் கட்சித் தலைவர்கள் எல்லோரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள் அந்த வகையில் சட்டசபை தேர்தல் அறிவிப்பு இதற்கு முன்பு இருந்தே எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் தமிழகம் முழுவதும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

தமிழ்நாடு முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வந்திருந்த தொகுதிகளில் பிரசாரம் செய்து வரும் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் அவர் செல்லும் இடங்களில் எல்லாம் அதிமுகவிடம் இருக்கும் குறைகளை கூறி ஓட்டுகளை கேட்டு ஒரு அறையைத் தவிர அவர் செய்த நல்ல விஷயங்கள் எதையுமே மக்களிடம் கூறவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.

அதேபோல நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அதைச் செய்வோம் இதைச் செய்வோம் என்பது போன்ற வாக்குறுதிகளை எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் தெரிவித்து வருகிறார் இயற்றிய நாங்கள் இந்த நல்ல திட்டங்களை செய்தோம் என்பது போன்ற எந்த ஒரு திட்டத்தையும் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் மக்களிடம் எடுத்துரைக்க வில்லை என்று சொல்லப்படுகிறது.

என்னதான் ஷாலின் செல்லும் இடங்களிலெல்லாம் கூட்டம் கூடினாலும் அது ஒரு அரசியல் கட்சி தலைவர்களை அருகில் பார்ப்பதற்காக பூளும் கூட்டமாகவே இருக்கிறது அதில் ஒருவர் கூட எதிர்கட்சியான திமுக விற்கு வாக்களிக்க மாட்டார்கள் என்பது போன்ற விமர்சனங்களும் இருந்திருக்கிறது.

ஏனென்றால் தமிழகத்திலேயே தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்க கூடிய எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான ஆட்சியில் பெரிய அளவில் மக்களிடம் அதிருப்தி இல்லை என்று தமிழகம் முழுவதும் பேசப்பட்டு வருகிறது ஒரு சில கருத்து கணிப்புகளும் அதையேதான் தெரிவிக்கின்றன.

ஆனால் சுமார் பத்து வருட காலமாக ஆட்சியில் அமராத திமுக மனவிரக்தி காரணமாக அதிமுகவை கண்டபடி விமர்சனம் செய்து வருகிறது அது மக்களிடையே திமுக மீது அதிருப்தியை மேலும் அதிகமாகிக் கொண்டிருக்கிறது என்று தெரிவிக்கப்படுகிறது.

இந்த சூழ்நிலையில் ராயபுரம் பெரம்பூர் மாதவரம் ஆர்கே நகர் துறைமுகம் எழும்பூர் திருவொற்றியூர் திருவிக நகர் ஆகிய சட்டசபை தொகுதிகளில் தேர்தல் பிரசாரத்தை மேற்கொண்ட எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக வண்ணாரப்பேட்டையில் இஸ்லாமியர்கள் நடத்திய போராட்டத்திற்கு திமுக ஆதரவு கொடுத்தது திமுக ஆட்சிக்கு வந்த உடனேயே அந்த சட்டத்திற்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்படும் என்று தெரிவித்திருக்கிறார்.

வண்ணாரப்பேட்டை பகுதியில் போராட்டம் நடந்த சமயத்தில் பொதுமக்களை தற்போது இந்த தொகுதியில் வெற்றிபெற்று அமைச்சராக இருக்கக்கூடிய ஜெயக்குமார் முன்பு சந்தித்தாரா என்ற கேள்வியை எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் முன்வைத்திருக்கிறார் அதேபோல மேற்கு வங்கம் கேரளா போன்ற மாநிலங்களில் இந்த சட்டத்தை அந்த மாநில அரசுகள் அனுமதிக்கவில்லை அதேபோல அதிமுக ஆட்சியில் இந்த சட்டத்தை தமிழகத்தில் நுழைய விடமாட்டோம் என்று தெரிவித்திருக்கிறார் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின்.

இந்த தொகுதியின் வேட்பாளர் தற்போது அமைச்சராக இருக்கக் கூடிய ஜெயகுமார் நாடாளுமன்றத்தில் இந்த சட்டத்தை ஆதரித்து ஓட்டளித்து விட்டு பாஜகவுடன் கூட்டணி வைத்துக்கொண்டு தற்சமயம் தேர்தலுக்காக இங்கே வந்து பாட்டுபாடி வாக்கு சேகரித்து கொண்டிருக்கின்றார் என்று எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் செய்திருக்கிறார்.

அதோடு தமிழகத்தில் இருக்கக்கூடிய அமைச்சர்கள் மற்றும் முதலமைச்சர் போன்றவர்கள் செய்த ஊழல்கள் தொடர்பான பட்டியலை தமிழக ஆளுநரிடம் அளித்தும் அவர் நடவடிக்கை எடுக்க மாட்டார் என்பது வேற விஷயம் ஆனால் எதிர்க்கட்சியாக இருக்கக்கூடிய ஒரு கட்சி ஆளும் கட்சியின் மீது ஊழல் புகார் இருந்தால் அதனை ஆளுனரிடம் அளிப்பதுதான் நாங்கள் செய்தோம் என்று தெரிவித்திருக்கிறார்.

திமுக ஆட்சிக்கு வந்த மறுநாளே அந்த மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் மீன்வளத் துறை அமைச்சராக இருக்கக் கூடிய ஜெயக்குமார் எதிர்காலத்தில் மீனவர்களை சந்தித்து அவர்களுக்கு ஏதாவது உதவி செய்தாரா இந்த தொகுதியில் 5 முறை வெற்றி பெற்று சட்டசபை உறுப்பினராக இருக்கும் அமைச்சர் ஜெயக்குமார் ஆல் ராயபுரம் தொகுதி குறிப்பிடத்தக்க வளர்ச்சி அடைந்து இருக்கிறதா என்று கேள்வியை அடுக்கடுக்காக வைத்திருக்கிறார் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின்.

ஆனால் எதிர்க்கட்சித் தலைவர் கேட்கும் கேள்விகள் ஒவ்வொன்றுக்கும் அமைச்சர்களோ அல்லது முதலமைச்சரோ பதில் தெரிவிக்கிறார்கள் இல்லையோ சமூகவலைதளத்தில் இளைஞர்கள் அதில் தெரிவித்து வருகிறார்கள் அவர்கள் கொடுக்கும் பதிலும் இவரை எதிர்த்து கேட்கும் கேள்விக்கு உங்களிடம் பதில் இருக்கிறதா என்ற கேள்வியை தமிழகம் முழுவதிலும் எழுந்திருக்கிறது.

அதோடு கடந்த 10 ஆண்டு காலமாக ஆட்சியில் இல்லாத திமுக தொலைபேசியில் இருப்பதாகவும் அவர்கள் அதிகாரத்திற்கு கொண்டு வரப்பட்டால் நிச்சயமாக அடுத்த ஐந்தாண்டு காலத்தில் தமிழ்நாடு கடுமையான சரிவை சந்திக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது அதோடு பாமர மக்கள் வெகுவாக பாதிப்படைவார்கள் என்றும் சொல்லப்படுகிறது.

அதன் காரணமாக எதிர்க்கட்சித் தலைவராக ஸ்டாலின் என தான் தமிழகம் முழுவதிலும் சூறாவளி பிரசாரத்தை மேற்கொண்டாலும் தற்சமயம் ஆட்சிக்கு வருவது மிகக் கடினம் என்று தெரிவிக்கப்படுகிறது இதனால் எதிர்க் கட்சியான திமுகவின் தலைமை மிகுந்த அதிர்ச்சியில் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.