DMK BJP: சட்டமன்ற பட்ஜெட் தாக்கலின் போது மாற்றுத்திறனாளிகளை முன்னெடுத்துச் செல்லும் வகையில் பல்வேறு நலத்திட்ட மசோதாக்கள் கொண்டுவரப்பட்டது. அதாவது கிராம ஊராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்கள், பேரூராட்சிகள், நகராட்சிகள் மாநகராட்சி உள்ளிட்ட தேர்தல்களில் மாற்றுத்திறனாளிகள் போட்டியிடாமல் நேரடியாகவே அவர்களை பதவியில் நியமிக்கலாம். இவ்வாறு அவர்களுக்கு முதன்மை உதவி செய்வதன் மூலம் மற்றவர்களைப் போல அவர்களையும் சம அளவில் நடத்துவது உறுதி செய்யப்படும்.
இந்த மசோதா ஒப்புதலுக்காக ஆளுநர் ஆர் என் ரவியிடம் அனுப்பி வைத்தனர். முன்னதாகவே பல மசோதாக்கள் ஆளுநர் கிடப்பில் போடப்பட்டதை அடுத்து தமிழக அரசு நீதிமன்றம் வரை சென்ற பிறகு தான் அனைத்து மசோதாக்களுக்கும் ஒப்புதல் கிடைத்தது. அப்படி இருக்கையில் தற்போதும் அதேபோல் ஆளுநர் செய்ய வாய்ப்புள்ளது என பலர் கூறி வந்தனர். ஆனால் அவர் மாற்றுத்திறனாளிகளுக்கான மசோதாக்களுக்கு உடனடியாகவே ஒப்புதல் அளித்து உத்தரவிட்டுள்ளார்.
இது ரீதியாக செய்தியாளர்கள் ஸ்டாலினிடம் கேள்வி எழுப்பிய போது, ஆளுநர் ஒப்புதல் அளித்து விடுவார் என்பது நான் முன்கூட்டியே எதிர்பார்த்ததுதான். ஒப்புதல் அளிக்காவிட்டால் மீண்டும் நாங்கள் நீதிமன்றத்திற்கு சென்று விடுவோம் என்ற பயத்தில் தான் அவர் கையெழுத்திட்டுள்ளார் என்று கூறியுள்ளார். இவ்வாறு ஆளுநர் திமுகவை கண்டு அஞ்சுகிறது என ஸ்டாலின் கூறியது பெரும் பரபரப்பாக பேசப்படுகிறது.