ஒரே ட்ரிங்க் மூன்று நாள் தான்.. ஆஸ்துமா பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு!!

0
86
#image_title
உங்களுக்கு ஆஸ்துமா பிரச்சனை உள்ளதா! 3 நாட்கள் இதை குடித்தால் சரியாகி விடும்!
ஆஸ்துமா பிரச்சனையால் தினமும் வேதனை அனுபவித்து வந்து கொண்டிருப்போம். இந்த பிரச்சனையை நிரந்தரமாக சரிசெய்ய இந்த மருந்தை தயார் செய்து மூன்று நாள் குடித்து வந்தால் ஆஸ்துமா பிரச்சனை சரியாகும்.
ஆஸ்துமா பிரச்சனையை சரி செய்ய இந்த பதிவில் கூறப்படும் மருந்து மட்டுமல்ல. நாம் எடுத்துக் கொள்ளும் உணவுப் பழக்கமும் இந்த ஆஸ்துமா பிரச்சனையை சரி செய்யும். இப்பொழுது ஆஸ்துமா பிரச்சனையை நிரந்தரமாக சரி செய்யக் கூடிய மருந்தை எவ்வாறு தயார் செய்வது என்று பார்க்கலாம்.
மருந்தை தயார் செய்யும் முறை;
அடுப்பை பற்ற வைத்து ஒரு பாத்திரத்தில் ஒரு டம்ளர் அளவு தண்ணீர் எடுத்துக் கொள்ள வேண்டும். அடுத்து இதில் 5 கிராம்பு சேர்த்துக் கொள்ள வேண்டும். அடுத்து இதில் எட்டு மிளகு சேர்த்துக் கொள்ள வேண்டும். அடுத்து இதில் ஆறு துளசி இலைகளை சேர்த்துக் கொள்ள வேண்டும். அடுத்து சிறிய அளவு இஞ்சித் துண்டை தோல் நீக்கி சிறு சிறு துண்டுகளாக இதில் சேர்த்துக் கொள்ள வேண்டும். அடுத்து இதை நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
ஒரு டம்ளர் அளவு தண்ணீர் முக்கால் டம்ளர் அளவு தண்ணீராக மாறும் அளவிற்கு இந்த தண்ணீரை நன்கு கொதிக்க வைக்க வேண்டும். அப்பொழுது தான் இதில் சேர்க்கப்பட்ட பொருட்களின் சாறுகள் இந்த தண்ணீரில் இறங்கும். பிறகு இந்த தண்ணீரை வடிகட்ட வேண்டும். மிதமான சூட்டிற்கு வந்த பிறகு இதில் ஒரு டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்துக் கொள்ள வேண்டும். பிறகு இதை கலக்கி விட்டு குடிக்கலாம். இதை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இதை ஒரு வாரம் தொடர்ந்து குடித்து வந்தால் ஆஸ்துமா பிரச்சனை சரியாகும்.
இதில் சேர்க்கப்பட்டிருக்கும் பொருட்களின் பலன்கள்;
கிராம்பு ஆஸ்துமா பிரச்சனை இருப்பவர்களுக்கு ஒரு சிறந்த தீர்வாக இருக்கும். ஆஸ்துமா உள்ளவர்களுக்கு ஏற்படும் மூச்சிரைக்கும் பிரச்சனையை சரி செய்யும். கிராம்பு சளியை கரைத்து வெளியேற்றி விடும்.
ஆஸ்துமா பிரச்சனை உள்ளவர்கள் மிளகை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இரைக்கும் தன்மையை மிளகு சரி செய்யும். சளியை கரைத்து வெளியேற்றும். மேலும் மிளகை நம் உணவில் எடுத்துக் கொள்வதால் இரவு நன்கு தூக்கம் வரும்.
ஆஸ்துமா பிரச்சனைகளுக்கு சில டிப்ஸ்;
* ஆஸ்துமா பிரச்சனை உள்ளவர்கள் காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் சுடு தண்ணீர் குடிக்க வேண்டும். இது ஆஸ்துமா பிரச்சனைக்கு சிறந்த தீர்வாக இருக்கும்.
* பசும்பால், பாக்கெட் பால் ஆகியவற்றை குடிக்க கூடாது. சத்துமாவு கஞ்சி குடிப்பவர்கள் பால் கலக்காமல் சாப்பிட வேண்டும். பசும்பால், பாக்கெட் பாலுக்கு பதிலாக தேங்காய் பால் பயன்படுத்தலாம்.
* தினமும் ஏதாவது ஒரு மூலிகை டீ தயார் செய்து குடிக்க வேண்டும். கற்பூரவல்லி மற்றும் கருந்துளசி இலைகளை பயன்படுத்தி டீ தயார் செய்து குடிக்கலாம். அல்லது இந்த பதிவில் கூறப்பட்டிருக்கும் டீயை தயார் செய்து குடிக்கலாம்.
* காலை உணவுகளில் சிவப்பரிசி அவுல் சார்ந்த உணவுகளை சாப்பிடுவதால் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும். ஆஸ்துமா பிரச்சனை இருப்பவர்களுக்கு மூச்சு இரைப்பு தொடர்பான பிரச்சனைகள் சரியாகும்.
* பிற்பகல் அதாவது 11 மணி அந்த நேரத்தில் சிவப்பு வாழைப்பழம் சாப்பிட வேண்டும். அல்லது தேங்காய் துருவலுடன் வெல்லத்தை சேர்த்து சாப்பிடலாம். மாதுளம் பழம் மாதுளம் ஜூஸ் இவை அனைத்தையும் சாப்பிடலாம்.
* மதிய வேலைகளில் தூதுவளை ரசம் போல ஏதாவது ஒரு மூலிகையில் ரசம் செய்து உணவுடன் சேர்த்து சாப்பிட வேண்டும்.
* இந்த பதிவில் சொல்லப்பட்டிருக்கும் இந்த டீயில் இஞ்சிக்கு பதிலாக சுக்கு சேர்த்துக்  குடிக்கலாம். ஒரு நல்ல தீர்வை தரும்.
* இரவு நேரங்களில் இட்லி, இடியாப்பம், தோசை, சிறுதானியக் கஞ்சி, சம்பா கோதுமை உப்புமா போன்ற உணவுகளை சாப்பிடலாம்.
* ஆஸ்துமா பிரச்சனை உள்ளவர்கள் இரவு 8.30 மணிக்குள் கட்டாயமாக சாப்பிட வேண்டும். அதற்கு மேல் சாப்பிட்டு விட்டு அப்படியே படுத்தால் மூச்சிரைப்பு அதிகமாகும். அதனால் ஆஸ்துமா உள்ளவர்கள் 8.30 மணிக்குள் சாப்பிட வேண்டும்.