தினமும் காபி அதிகமாக குடிக்கும் பழக்கம் உடையவர்களா!! உங்களை ஆபத்து நெருங்கிவிட்டது!! இனிமேல் இதை செய்யாதீங்க!!

Photo of author

By Jeevitha

தினமும் காபி அதிகமாக குடிக்கும் பழக்கம் உடையவர்களா!! உங்களை ஆபத்து நெருங்கிவிட்டது!! இனிமேல் இதை செய்யாதீங்க!!

Jeevitha

Do you have the habit of drinking too much coffee every day!! Danger is approaching you!! Don't do this again!!

காபி நமக்கு புத்துணர்ச்சி கொடுக்க வேண்டும் என்பதற்காக தினமும் இரண்டு அல்லது மூன்று முறை குடிக்கிறோம். ஆனால் அப்படி குடிக்க கூடாது. இதனால் நமக்கு பக்க விளைவுகள் ஏற்படும். மேலும் சோர்வாக இருக்கும் போது மூளையை சுறுசுறுப்பாக்க காபி குடிக்கலாம். ஆனால் சிலர் மகிழ்வாக இருந்தாலும் சரி, சோர்வாக இருந்தாலும் சரி, காபி குடிக்க வேண்டும் என்று நினைப்பார்கள். இந்த அளவுக்கு காபி அதிகமாக குடித்தால் உடல் ஆரோக்கியம் மற்றும் மன ஆரோக்கியம் என இரண்டும் பாதிக்கும்.

அது மட்டும் அல்லாமல் நம்முடைய நரம்பு மண்டலத்தை பாதிக்கும். மேலும் தலைவலி, பதட்டம், தூக்கமின்மை மற்றும் தூக்கக் கோளாறு நோய்கள் ஏற்படுகிறது. காபி அதிகமாக உட்கொள்ளும் போது கடுமையான உடல் வலி மற்றும் அசௌகரியங்கள்,  இயற்கையாகவே சிறுநீர் பெருக்கத்தை உண்டாக்கும். இதனால் உங்கள் உடலில் அதிகமாக நீர் சத்து குறைபாடு உண்டாகும். இவ்வளவு நோய்கள் மறைமுகமாக செலுத்தப்படுகிறது உங்கள் உடலில். அதற்கு காரணம் நீங்களே.

இது மட்டும் அல்லாமல்  University of Sydney  வெளியிட்ட ஆய்வு கட்டுரை  ஒன்றில் Decaf Kills Coffee Withdrawal Symptoms என்னும் செய்திக் குறிப்பில் காபி அதிகமாக குடிப்பதால் விளைவுகள் மற்றும் அதன் அறிகுறிகள் குறித்தும், அதில் இருந்து எப்படி வெளியேறுவது எனவும் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.  அதற்காக காபி குடிப்பது ஆபத்து என்று அர்த்தம் அல்ல, எதுவாக இருந்தாலும் அளவோடு இருக்க வேண்டும். “அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு” என்று தெரிந்து கொள்ள வேண்டும்.