கடவுளே வணங்கும்போது செய்யக்கூடாது என்ன தெரியுமா?

Photo of author

By CineDesk

கடவுளே வணங்கும்போது செய்யக்கூடாது என்ன தெரியுமா?

CineDesk

கடவுளே வணங்கும்போது செய்யக்கூடாது என்ன தெரியுமா?

கடவுளை வணங்கும்போது கோவிலிலும் சரி வீட்டிலும் சரி நம்மை அறியாமல் சில தவறுகளை செய்து விடுகிறோம். இதனால் நான் நினைத்து வழிபடக்கூடிய சுபகாரியங்களும் தடைபடுகிறது. ஒவ்வொரு ஆலயத்தில் தீபம் ஏற்றுவதற்கு என தனியான இடங்களில் தீபம் ஏற்ற வேண்டும். கடவுளுக்கு அருகாமையில் தீபம் ஏற்ற கூடாது. பூஜை செய்யாத பொருட்களை பூஜை செய்து பொருட்களுடன் சேர்த்து விடக்கூடாது.

திங்கட்கிழமைகளில் பஞ்சால் செய்யப்பட்ட விளக்கு திரியை எக்காரணம் கொண்டு கையில் எடுக்கக்கூடாது. வீட்டில் கோலம் போடாமலும் விளக்கேற்றாமலும் எக்காரணம் கொண்டு எந்த ஒரு ஆலயத்திற்கும் செல்லக்கூடாது.

விளக்கு எரிந்து கொண்டிருக்கும் போது எண்ணெய் அல்லது நெய்யை கையில் தொடக்கூடாது. அதுபோல விளக்கேற்றும் போது எண்ணெய் கையில் பட்டால் உடனே தலையில் தடவக்கூடாது. வீட்டில் சாமி படத்திற்கு போடப்பட்ட மாலை காய்ந்து விட்டால் உடனே அகற்ற வேண்டும்.

விஷ்ணு கோவிலுக்கு சென்று வீடு திரும்பும் போது லட்சுமி தேவியும் நம் வீட்டிற்க்கு வருவதாக ஐதீகம். விஷ்ணு கோவிலில் இருந்து வீடு திரும்புவதற்கு முன் அங்கே அமரக்கூடாது. ஸ்வஸ்திக், ஸ்ரீ சக்கரம், ஓம் மற்றும் திரிசூலம் சின்னங்களை வாசல் கதவிலோ அல்லது வாசலின் உள்ளேயோ அல்லது நேர் எதிரேயோ ஒட்டி வைப்பது பாதுகாப்பிற்கும், அதிர்ஷ்டத்திற்கும் உதவும். வெளியே செல்லும்போது இதனை எடுத்து செல்வதன் மூலம் செல்லும் காரியம் வெற்றியோடு முடியும்.

வாசலுக்கு நேர் எதிரே வாசலைப் பார்த்து துளசிச் செடியை வைப்பதன் மூலம் வீட்டில் செல்வ வளம், வெற்றி, தனலாபம் போன்றவை அதிகரிக்கும்.

அபிஷேக ஆராதனைகளும், ஹோமங்களும் உயர்வு தரும். பரிகாரம் செய்யும் நேரத்தில், பரிகாரம் சம்பந்தப்பட்ட நபர் வீட்டில் உறங்கக்கூடாது. பூஜை செய்துகொண்டிருக்கும் பொது, யாராவது பிரசாதம் கொடுத்தால், அதைப் பெற்றுக்கொண்டு பூஜை முடிந்தபின் உண்ணவும்.