சாப்பிட்ட தட்டில் இதை செய்தால் தரித்திரம் பிடிக்கும்?

0
80

நாம் முறையாக சாப்பிடுவதற்கும் நம் முன்னோர்கள் வழிமுறை வகுத்து வைத்துள்ளனர்.ஏன் இந்த திசையில் சாப்பிட்டால் இந்த பலன்கள் என்றும் நமக்கு கணித்துக் கூறியுள்ளனர்.நம் உடலில் ஏற்படும் சிறு சிறு மாற்றங்களை கூட முன்கூட்டியே அறிந்து அதற்கான வழிமுறைகளை வகுத்துக் கொடுத்துள்ளனர் நம் முன்னோர்கள்.எவ்வாறு சாப்பிட வேண்டும்? சாப்பிடும் போது செய்யக்கூடியவை?கூடாதவை? பற்றி நம் முன்னோர்கள் கூறியதில் சிலதைக் காணலாம்.

தனி ஒருவர் சாப்பிடும் பொழுது சரியான திசையில் உட்கார்ந்து உணவு உட்கொள்ள வேண்டும்.

எந்த திசையில் சாப்பிட்டால் என்ன பலன்கள் என்று நாம் முந்தைய பதிவில் பதிவிட்டுள்ளோம். தெரிந்துகொள்ள விரும்புவோர் இந்த லிங்க்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளுங்கள்.
https://bit.ly/2XSoQXB

சாப்பிட்ட வட்டில் கைகளை கழுவ கூடாது அது அன்னலட்சுமி அவமானப்படுத்த வதற்கு சமமாகும்.வேறொரு தட்டில் தான் கைகளை கழுவ வேண்டும்.சாப்பிட்ட தட்டில் கைகளை கழுவினால் நமக்கு நீங்க தரித்திரம் உண்டாகும்.

நாம் சாப்பிடும் பொழுது தரையில் உட்கார்ந்து தான் சாப்பிட வேண்டும்.பூக்களைளோயோ அல்லது சாமி பொருட்களையோ எவ்வாறு கட்டிலிலும் அல்லது சேரின் மீதும் வைக்கக்கூடாது என்று கூறுகிறார்களோ, அதுபோன்றுதான் அன்னலட்சுமியை மெத்த கட்டிலிலோ அல்லது சேர் மீது அமர்ந்தோ உணவு உண்ணக்கூடாது. இது அன்னலட்சுமி அவமான படுத்துவதாகும்.

சாப்பிடும்போதோ அல்லது சாப்பாடு போடும்போதோ ஒரு பருக்கை கூட இறைத்து விடுக் கூடாது.நாம் சிந்தும் ஒவ்வொரு பருக்கையும்,100 நெற்பயிரை உருவாக்குபவை என்பதனை நம் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்.
குழந்தைகளுக்கு சிந்தாமல் சாப்பிடும் பழக்கத்தை சிறுவயதிலிருந்தே சொல்லித்தர வேண்டும்.

நாம் சாப்பிடும் பொழுதுமற்றவர் அதை பார்த்த முகம்
சுளிக்காதவாறு சுத்தமாக சாப்பிட வேண்டும்.அதாவது எல்லாம் குழப்பிக்கொண்டு மற்றவர் பார்க்கும் பொழுது முகம் சுளிக்க வைக்கக் கூடாது.அப்படி செய்ய வைப்பது அன்னலட்சுமி அவமானப் படுத்துவதற்கு சமமாகும்.எனவே சாப்பிடும் பொழுது எதுவும் குழப்பாமல் நீட்டாக சாப்பிட்டு பழக வேண்டும்.

author avatar
Pavithra