அள்ள அள்ள குறையாத செல்வம் வேண்டுமா?? அப்போ நீங்கள் இந்த இலையில் வியாழக்கிழமை தீபம் ஏற்றிப் பாருங்க!! 

0
41
#image_title

அள்ள அள்ள குறையாத செல்வம் வேண்டுமா?? அப்போ நீங்கள் இந்த இலையில் வியாழக்கிழமை தீபம் ஏற்றிப் பாருங்க!! 

இந்த இலை மட்டும் நம்ம வீட்டில் இருந்தால் நல்ல தேவதைகள் நமது வீட்டிற்கு வருவார்கள் என்பது ஐதீகம். அது என்ன இலை, அதன் மூலம் குபேர பகவானின் அருள் பெற நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.

இந்த இலை நமது வீட்டில் இருந்தால் அங்கு நல்ல தேவதைகளின் ஆதிக்கம் அதிகரித்து காணப்படும். அந்தச் செடியை சுற்றிலும் ஒரு விதமான ஈர்ப்பு இருப்பதால் அந்த ஈர்ப்பானது நல்ல விஷயங்களை கிரகித்து நமக்கு அளிக்கும். மேலும் கெட்ட விஷயங்களை அகற்றக் கூடிய ஆற்றல் பெற்றதுதான் இந்த இலை. இது கிடைப்பதற்கு அரியதோ அல்லது மிகவும் விலை அதிகமானதோ அல்ல. அது முன்பெல்லாம் ஏராளமானோர் வீட்டினில் உள்ள மங்கைகளின் கைகளை இயற்கையான முறையில் சிவந்து அழகு படுத்திய மருதாணி செடி தான் அது.

இந்த மருதாணி இலைகளுக்கு நல்ல சக்திகளை வெளியிடக்கூடிய ஆற்றல் அதிகம் உள்ளது. இந்த இலைகளை பயன்படுத்தி தீபம் ஏற்றும் பொழுது மகாலட்சுமி மற்றும் குபேர பகவானின் அருள் பெற்று சகல சௌபாக்கியங்களையும் அடைந்து விடலாம் என்பது சாஸ்திரம்.

மருதாணி இலைகளைக் கொண்டு லஷ்மி மற்றும் குபேர பகவானின் அருளைப் பெற நாம் செய்ய வேண்டியதை பற்றி பார்ப்போம்.

வியாழன் அல்லது வெள்ளிக்கிழமை லஷ்மி மற்றும் குபேரர் படத்தின் முன்பு ஒரு தாம்பூல தட்டை வைத்துக் கொள்ளவும். வெள்ளி, செம்பு, பித்தளை, தங்கம், என எந்த உலோகத்திலும் அந்த தாம்பூலதட்டு இருக்கலாம். ஆனால் எவர்சில்வர், மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக் கூடாது.

அந்த தட்டீன் மீது மருதாணி இலைகளை பரப்பி விடவும். இதற்கு பிரெஷ் ஆக பறித்த மருதாணி இலைகளையே பயன்படுத்த வேண்டும். அதன் மீது நாணயங்களை வைக்க வேண்டும். நாணயங்களில் மகாலட்சுமி வாசம் புரிகிறாள் என்பது ஐதீகம். அதற்கு அடுத்ததாக மகாலட்சுமிக்கு உகந்ததாக கருதப்படும் ஏலக்காய் மற்றும் கிராம்பு போன்றவற்றையும் தூவி கொள்ளலாம்.

அடுத்ததாக மண்ணினால் செய்யப்பட்ட அகல் விளக்கு ஒன்றை எடுத்துக்கொண்டு அதில் மஞ்சள் மற்றும் குங்குமம் வைக்கவும். பின்னர் அதனை மருதாணி இலைகளின் மீது வைத்து நெய்யை ஊற்றவும். நெய் இல்லையெனில் நல்லெண்ணெய் பயன்படுத்தலாம். வேறு எதனையும் பயன்படுத்தக் கூடாது.

பின்னர் அதில் சுத்தமான பஞ்சனால் செய்யப்பட்ட திரியை போட்டு வடக்கு அல்லது கிழக்கு முகமாக தீபம் ஏற்ற வேண்டும்.

கிழக்கு முகத்தில் லட்சுமி தேவியும் வடக்கில் குபேர பகவானும் வாசம் செய்கிறார்கள். எனவே அந்த திசைகளில் தீபம் ஏற்றினால் நமக்கு செல்வம் பெருகும். அடுத்ததாக நெய்யினுள் பச்சை கற்பூரம் மற்றும் டைமண்ட் கல்கண்டு போன்றவற்றை போடலாம்.
இவை அனைத்துமே நமக்கு செல்வத்தையும் பணத்தையும் ஈர்த்து தரக்கூடிய அற்புதமான விஷயங்கள்.

வியாழக்கிழமையில் குபேர பகவானுக்கும் வெள்ளிக்கிழமையில் லட்சுமி தேவிக்கும் தீபம் ஏற்றி வைக்கலாம். அவரவருக்கு ஏற்ற கிழமைகளில் தீபம் ஏற்றி வைப்பதோடு மட்டுமில்லாமல் அவர்களுக்கு உரிய மந்திரத்தையும் உச்சரித்து வருவது மிகவும் நல்லது.

இதேபோல் வளர்பிறை வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் தீபம் ஏற்றி வர உங்களுக்கு ஏற்பட்டுள்ள தடைகள் அகன்று செல்வ செழிப்புடன் இருப்பதோடு மட்டுமில்லாமல் பண வரவிற்கு எப்போதும் குறைய இருக்காது. மேலும் வறுமை ஒழிந்து சுப காரியங்கள் வீட்டில் கைக்கூடும்.