அந்த பக்கம் மட்டும் போகாதீங்க… – பாக். வீரர்களுக்கு எச்சரிக்கை விடுத்த ரமிஸ் ராஜா!

0
38
#image_title

அந்த பக்கம் மட்டும் போகாதீங்க… – பாக். வீரர்களுக்கு எச்சரிக்கை விடுத்த ரமிஸ் ராஜா!

தற்போது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. ஆரம்பத்தில் பாகிஸ்தான் அணி மாஸாக தன் ஆட்டத்தை வெளிப்படுத்தி கெத்து காட்டியது. ஆனால், தற்போது பாகிஸ்தான் சரிவு விளம்பில் இருந்து வருகிறது.

தற்போது, அடுத்து இலங்கை அணிக்கு எதிராக இந்தியா வெற்றிபெற்றதால், அந்த அணிக்கு ஆசிய கோப்பை இறுதிப் போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பையும் இந்தியா வழங்கி உள்ளது.

தற்போது, பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் ரமீஸ் ராஜா பாகிஸ்தான் அணிக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் பேசுகையில்,

இலங்கைக்கு எதிராக இந்திய, பாகிஸ்தான் அணி விளையாடி சிறு நம்பிக்கை அளித்திருக்கிறது. இதில், பாகிஸ்தான் அணி முன்னேறுமா அல்லது இந்தியா மீளுமா என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டுடம். இந்திய அணியிடமிருந்து சிறிது விலகி இருங்கள். இந்திய அணிக்கு ரிசர்வ் நாள் கிடைத்தது.

அதேபோல், இலங்கை போட்டிக்கு முன் 2 நாட்கள் ஓய்வும் கிடைத்திருக்கிறது. இந்திய அணியுடைய கிரிக்கெட்டை பற்றி அமர்ந்து தங்களுக்குள் பேச வேண்டும். உங்களுக்கு சிறப்பு பயிற்சி தேவைப்பட்டால் செய்யுங்கள். நீச்சல் குளத்துக்கு சென்று ஓய்வெடுங்கள். ஆனால், சமூகவலைத்தள பக்கத்திற்கு மட்டும் வந்துவிடாதீர்கள். டிவி பார்க்காதீர்கள். அதில் ஒரு நல்ல விஷயம் கூட இல்லை. தோல்விக்கு பிறகு ஒருவரையொருவர் குற்றம் சாட்டிக்கொள்கிறார்கள். இந்தியாவுக்கு எதிரான தோல்விக்கு பிறகும் அதையே செய்கிறீர்கள். அது நடக்கக் கூடாது. மொத்த பாகிஸ்தானும் உங்கள் மேல் கோபத்தில் உள்ளது என்றார்.

author avatar
Gayathri