லியோ ஆடியோ லான்ச் நடப்பதில் சந்தேகம்! அரசியல் சதி? ரசிகர்கள் கவலை!

0
29
#image_title

லியோ ஆடியோ லான்ச் நடப்பதில் சந்தேகம்! அரசியல் சதி? ரசிகர்கள் கவலை!

கோலிவுட்டில் மாஸ் ஹீரோவாக வலம் வரும் விஜய் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘லியோ’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார்.இதில் த்ரிஷா,சஞ்சய் தத்,அர்ஜுன்,மிஸ்கின்,கவுதம் மேனன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். இப்படத்திற்கு ராக் ஸ்டார் அனிருத் இசையமைத்துள்ளார்.இப்படம் வருகின்ற அக்டோபர் 19 அன்று உலகம் முழுவதும் திரையிட பட உள்ளது.வெளிநாடுகளில் லியோ படத்தின் டிக்கெட் முன்பதிவு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

லியோ படத்தின் ‘நான் ரெடி தான் வரவா’ என்ற முதல் பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது.வெளியான சில மாதங்களில் சமூக வலைத்தளமான யூடியூபில் 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்தது.இந்நிலையில் இப்படத்தின் ஆடியோ லஞ்ச் முதலில் வெளிநாட்டில் நடக்கும் என கூறப்பட்ட நிலையில்,அங்கு அனுமதிக்க கிடைக்காததால்,சென்னையிலேயே நடத்த படக்குழு முடிவு செய்தனர்.

அதன்படி வழக்கம் போல் சென்னையில் அமைந்துள்ள நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடத்த படக்குழு திட்டமிட்டு அதற்கு அனுமதி கேட்டுள்ளனர்.இந்த மாத இறுதியில் லியோ ஆடியோ லஞ்ச் நடைபெற இருக்கின்ற நிலையில் இதுவரை அனுமதி கிடைக்கவில்லை என்று சொல்லப்படுகிறது. இதற்குப்பின் அரசியல் சதி இருப்பதாக பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.இதனால் விஜய் ரசிகர்கள் கடும் அதிருப்தியில் இருக்கின்றனர்.

லியோ ஆடியோ லஞ்ச் நடத்த நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் அனுமதி கிடைக்காதபட்சத்தில் லீலா பேலஸ் அல்லது வேறு இடங்களில் ஆடியோ வெளியிட்டு விழாவை நடந்த படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கின்றது.