முழு மதுவிலக்கு! ஸ்டாலினின் விளக்கத்திற்கு அதிரடி பதில் கொடுத்த ராமதாஸ்!

0
61

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தன்னுடைய வலைப்பதிவில் தெரிவித்திருப்பதாவது தமிழகத்தில் கள்ளச் சாராய உற்பத்தி இருக்குமானால் அதனை கட்டுப்படுத்துவதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்வது தமிழக அரசின் கடமை அது சாத்தியமானது தான். அதனை செய்யாமல் கள்ளச்சாராயம் உள்ளிட்ட பாதிப்புகளை தடுப்பதற்காக மதுக்கடைகளை திறப்பதற்கு காரணமாக தெரிவிப்பது தமிழக அரசின் தோல்வியையே பறைசாற்றுகிறது என்று தெரிவித்திருக்கின்றார்.

முழுமையான மதுவிலக்கு கோரிக்கைகள் பலமாக எழுப்பப்படும் சமயத்தில்தான் மதுக்கடைகளை மூடிவிட்டால் கள்ளச்சாராயம் பெருகிவிடும் என்ற ஒரே காரணத்தை கடந்த 38 வருடங்களாக மது விற்பனைக்கான பாதுகாப்பு கவசமாக பயன்படுத்தி வருகிறது கள்ளச்சாராயத்தை தடுக்க வேண்டியது தமிழக அரசின் தலையாய கடமை என்று தெரிவித்திருக்கிறார் மருத்துவர் ராமதாஸ்.

நோய் தொற்று பரவாமல் தடுப்பதற்காக தமிழகத்தில் அனைத்து மதுக்கடைகளையும் உடனடியாக மூடப்பட வேண்டும் மது அரக்கனின் தீமைகளை தடுப்பதற்கு முழுமையான மதுவிலக்கை உடனடியாக அமல்படுத்த வேண்டிய அவசியத்தை தமிழக அரசு உணர வேண்டும் என்று தெரிவித்திருக்கின்றார் மருத்துவர் ராமதாஸ்.