நேரடி நியமனங்கள் மூலம் டிரைவர் பணியிடங்கள் நிரப்பப்படும்- அமைச்சர் சிவசங்கர் 

0
187
#image_title

நேரடி நியமனங்கள் மூலம் டிரைவர் பணியிடங்கள் நிரப்பப்படும்- அமைச்சர் சிவசங்கர்! 

அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தில் உள்ள டிரைவர் பணியிடங்கள் வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மூலம் நேரடியாக நிரப்புவதற்கான உத்தரவு வெளியிடப்பட்டுள்ளதாக அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தில் 685 ஓட்டுநர், நடத்துனர் பணியிடங்கள் மற்றும் 122 ஓட்டுநர் பணியிடங்களையும் நேரடி நியமனம் மூலம் அதாவது வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் செய்தித்தாள்களில் விளம்பரம் செய்து நிரப்பிட அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 

அதன்படி, அரசு விரைவு போக்குவரத்து கழக மேலாண் இயக்குனரால் ஓட்டுநர் உடன் நடத்துனர் பணியிடங்களுக்கு தேவையான கல்வித் தகுதி, வயது மற்றும் பிற தகுதிகள் பெற்ற தகுதி வாய்ந்த நபர்களின் மூப்பு பட்டியல் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வேலைவாய்ப்பு அலுவலகங்களிலிருந்து பெறப்படும். பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் அந்தந்த போக்குவரத்துக் கழகங்களால் செய்தித்தாள் மூலம் விளம்பரம் செய்யப்பட்டு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து இணையவழியில் விண்ணப்பங்கள் பெறப்படும். அவ்வாறு பெறப்பட்ட விண்ணப்பங்களில் இருந்து தகுதி வாய்ந்த நபர்களை தேர்வு செய்வதற்காக அந்தந்த மேலாண் இயக்குனர்களால் குழு அமைக்கப்பட்டு, சாலைப் போக்குவரத்து நிறுவனத்தின் உதவியுடன் தற்போதுள்ள அரசு விதிமுறைகளின்படி தேர்வு செய்யப்பட்டு பணியிடங்கள் நிறப்பப்படும். இதன் மூலம், பொதுமக்களுக்கான பொது போக்குவரத்து சேவைகள் மேம்படும் என்று அமைச்சர் சிவசங்கர் தெரிவி்த்துள்ளார்.

author avatar
Parthipan K