தலைநகர் டெல்லியில் நிலநடுக்கம்… அதிர்ச்சியில் உறைந்த மக்கள்!!

Photo of author

By Sakthi

தலைநகர் டெல்லியில் நிலநடுக்கம்… அதிர்ச்சியில் உறைந்த மக்கள்!!

Sakthi

Updated on:

தலைநகர் டெல்லியில் நிலநடுக்கம்… அதிர்ச்சியில் உறைந்த மக்கள்…

 

இந்தியாவின் தலைநகர் டெல்லியில் நேற்று(ஆகஸ்ட்5) திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் டெல்லியில் உள்ள மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது.

 

இந்திய நாட்டின் தலைநகராக டெல்லி இருக்கின்றது. டெல்லியில் என்.சி.ஆர் எனப்படும் தலைநகர் மண்டல் பகுதியில் நேற்று அதாவது ஆகஸ்ட் 5ம் தேதி இரவு 9.30 மணியளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 5.8 ஆக பதிவாகியுள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது.

 

ஆப்கானிஸ்தான் நாட்டின் இந்துகுஷ் பகுதிக்கும் பாகிஸ்தான் நாட்டின் எல்லை பகுதியையும் மையமாக வைத்து தேசிய தலைநகர் மண்டல் பகுதியில் இந்த நிலடுக்கம் ஏற்பட்டுள்ளது. மேலும் ஜம்மு, காஷ்மீர் மாநிலத்தின் பெரும்பாலன பகுதிகளில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது.

 

இதைப் போலவே கடந்த சில மாதங்களுக்கு முன்னர் டெல்லியில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில்  5.9 ஆக பதிவானது. நேற்று(ஆகஸ்ட்5) டெல்லியில் மண்டல் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக கட்டடங்கள் குலுங்கியதாக தகவல் கிடைத்துள்ளது. ஆனால் நிலநடுக்கத்தால் ஏதேனும் சேதாராம் ஏற்பட்டதா இல்லையா என்பது குறித்த தகவல்கள் கிடைக்கவில்லை.