கார சார விவாதத்துடன் நடைபெற்ற திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்!!

0
49

கார சார விவாதத்துடன் நடைபெற்ற திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்!!

திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று காணொளி காட்சி வாயிலாக நடைபெற்றது.இக்கூட்டத்தில் திமுகவின் பொதுச்செயலாளர்,துணை பொதுச்செயலாளர் மற்றும் திமுகவின் 72 மாவட்ட செயலாளர்கள் பங்கேற்றனர்.

ஏற்கனவே திமுக மாவட்ட தலைவர்கள் கூட்டம் கடந்த மார்ச் மாதம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை ஓராண்டு கொண்டாட வேண்டுமென்று அறிவிக்கப்பட்டிருந்தது.இதனை தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வரும் நிலையில் வருகின்ற ஆகஸ்ட் 7 ஆம் தேதி கலைஞரின் 5 ஆம் ஆண்டு நினைவு தினம் வருவதையொட்டி கூடுதலாக நிகழ்ச்சிகள் நடத்துவது குறித்த ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது.மேலும் கலைஞர் நினைவு தினத்தில் அமைதி பேரணி நடத்துவது குறித்த ஆலோசனையும் நடத்தப்பட்டது.

இதனை தொடர்ந்து அடுத்த 2024 ஆம் ஆண்டு வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தல் பணிகள்,தேர்தல் பரப்புரை,உறுப்பினர் சேர்க்கை மற்றும் கட்சியின் வளர்ச்சி பணிகள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து பேசப்பட்டது.

இந்நிலையில் கட்சி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களுக்கிடையே மோதல் போக்கு நிலவுகிறது.இதனால் உங்களுக்குள் ஒற்றுமையில்லை என்றும் பொது இடங்கள் மற்றும் மேடைகளில் நீங்கள் போடும் சண்டையை மக்கள் அனைவரும் பார்த்து கொண்டிருக்கிறார்கள் என்றும் கூறினார்.மேலும் மீடியா ஆட்கள் இவற்றையெல்லாம் பதிவு செய்கிறார்கள்.மேலும் இது தொடர்பான வீடியோக்களை சமூக வலைதள செயலிகள் மூலம் நானே பல முறை பார்த்திருக்கிறேன்.ஆனால் இது கூட தெரியாமல் சில அமைச்சர்கள் செயல்படுகிறார்கள்.இந்த நிலை இப்படியே தொடர்ந்தால் உங்களுக்கும் கழகத்திற்கும் நல்லதில்லை என்று முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை கூட்டத்தில் அனைவரையும் கடுமையாக எச்சரித்தார்.