ஒரு பைசா செலவின்றி வீட்டில் மொய்க்கும் ஈக்களை எளிதில் விரட்டலாம்!! இப்பொழுதே ட்ரை பண்ணி பாருங்க!!

0
115
Easily get rid of mosquitoes at home without spending a penny!! Try it now!!
Easily get rid of mosquitoes at home without spending a penny!! Try it now!!

வீட்டில் எலி,கரப்பான் பூச்சி,பல்லி,எறும்பு நடமாட்டத்தை போலவே ஈக்கள் கூட்டம் மொய்ப்பது அதிகரித்து வருகிறது.வீட்டில் அனைத்து இடங்களிலும் இந்த ஈக்கள் அட்டகாசம் செய்கிறது.இதை விரட்ட கடைகளில் விற்க கூடிய ஸ்ப்ரேக்களை அதிக காசு கொடுத்து வாங்கி பயன்படுத்தினாலும் அதனால் எந்த பலனும் கிடைப்பதில்லை என்பதே நிதர்சனம்.

முன்பெல்லாம் மாம்பழம்,பலாப்பழம் போன்ற பழ விளைச்சல் இருக்க கூடிய கோடை காலங்களில் மட்டுமே ஈக்கள் தொல்லை அதிகம் இருக்கும்.ஆனால் தற்பொழுது அனைத்து பருவ காலங்களிலும் ஈக்கள் மொய்ப்பது அதிகரித்த வண்ணம் உள்ளது.ஈக்கள் பெரிய அளவில் ஆபத்துக்கள் இல்லை என்றாலும் சில நோய்த்தொற்று பரவல் உண்டாக வாய்ப்பிருக்கிறது.

எனவே இந்த ஈக்களை விரட்ட வீட்டில் உள்ள சிலப் பொருட்களை பயன்படுத…
மழைகாலத்தில் வீட்டு மாடியில் நீர் கசிவை தடுக்க பெட்ரோலை இப்படி பயன்படுத்துங்கள்!!

மழைக்காலம் வந்துவிட்டாலே அனைவரது வீடுகளிலும் நீர் கசிவு ஏற்படுவது வழக்கமான ஒன்று தான்.தொடர் மழையால் வீட்டு மொட்டை மாடியில் நீர் தேங்கி வீட்டிற்குள் கசியும்.மாடி தரை தளத்தில் விரிசல் காணப்பட்டால் மழைக்காலங்களில் இதுபோன்ற நீர்க்கசிவு ஏற்படக் கூடும்.

இந்த விரிசலை சரி செய்ய சிமெண்ட் கலவை பூசினாலும் அவை சில தினங்களில் பயனற்று போய்விடும்.வாட்டர் ப்ரூப் சிமெண்ட் தளம் அமைத்தால் இதுபோன்ற தண்ணீர் கசிவில் இருந்து தப்பிக்க இயலும்.ஆனால் இதுபோன்ற வாட்டர் ப்ரூப் சிமெண்ட் தளம் அமைக்காதவர்களில் மழைக்காலங்களில் படும் பாடு சொல்லி மாளாது.

குறிப்பாக சென்னை போன்ற பெரு நகர மக்கள் அனைவரும் தங்கள் மொட்டை மாடி தரை தளத்தை முறையாக பராமரிக்க வேண்டும்.புயல் மழை காலங்களில் பெரும்பாலான வீடுகளில் மழைநீர் தேங்கிவிடுகிறது.இவ்வாறு தேங்கிய நீரை அப்புறப்படுத்தவே பல நாட்கள் ஆகிவிடும் நிலையில் வீட்டு சுவற்றில் நீர் கசிவு இருந்தால் பெரும் தொந்தரவாக மாறிவிடும்.

மொட்டை மாடி தரை தளத்தில் காணப்படும் விரிசலை சரி செய்ய பல முயற்சிகள் செய்து நொந்து போனவர்கள் தற்பொழுது சொல்ல உள்ள ட்ரிக்கை ஒருமுறை பின்பற்றினால் இனி வீட்டு மாடியில் தண்ணீர் கசிவு என்பது எப்பொழுது ஏற்படாது.

முதலில் தெர்மாகோல் சிறிதளவு எடுத்துக் கொள்ளவும்.ஒரு பீஸ் இருந்தால் கூட இதற்கு போதும்.அதன் பின்னர் 100 மில்லி அளவு பெட்ரோல் எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஒரு கிண்ணத்தில் பெட்ரோலை ஊற்றி தெர்மாகோலை போட்டு கரைய விடவும்.இப்படி செய்தால் ஒரு பேஸ்ட் கிடைக்கும்.இதை வீட்டு மொட்டை மாடி தரையில் காணப்படும் விரிசலில் பூசினால் தண்ணீர் கசிவு ஏற்படாது.இந்த பசியை ஓட்டை விழுந்த,விரிசல் விழுந்த தண்ணீர் தொட்டி,வாட்டர் டேங்கில் பூசினாலும் தண்ணீர் கசிவு ஏற்படாமல் இருக்கும்.