அதிமுவில் OPS நிலைமை அவ்வளவு தான்! முற்றுப்புள்ளி வைத்த எடப்பாடி பழனிசாமி

0
64

அதிமுவில் OPS நிலைமை அவ்வளவு தான்! முற்றுப்புள்ளி வைத்த எடப்பாடி பழனிசாமி

 

அதிமுகவில் நிலவி வரும் ஒற்றைத் தலைமை பிரச்சனையில் ஒவ்வொரு நாளும் என்ன நடக்கும் என்று அக்கட்சி தொண்டர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.அந்த அளவுக்கு இரு தரப்பும் மாறி மாறி கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

 

அந்த வகையில் O பன்னீர்செல்வம் அதிமுக ஒருங்கிணைப்பாளர் பதவியில் இல்லை என அக்கட்சியின் மூத்த நிர்வாகிகள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.அதை உறுதி செய்யும் வகையில் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

அந்த வகையில் உள்ளாட்சித் தோ்தலில் அதிமுக வேட்பாளா்களுக்கான படிவத்தில் கையெழுத்திடுவது குறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளா் எடப்பாடி கே.பழனிசாமிக்கு நேற்று கடிதம் எழுதினார்.

 

அதில், அதிமுக வேட்பாளா்களுக்கான படிவங்களில் வியாழக்கிழமை மாலை 3 மணிக்குள் இருவரும் கையெழுத்திட்டு தோ்தல் ஆணையத்துக்கு அளிக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தாா். ஆனால், அந்தக் கடிதத்தை எடப்பாடி பழனிசாமி தரப்பில் வாங்க மறுத்துவிட்டதாகவும் தகவல் வெளியானது.

 

இந்நிலையில் இது குறித்து ஓ.பன்னீர் செல்வத்திற்கு இன்று எடப்பாடி பழனிசாமி பரபரப்பு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது.

 

கழகப் பொருளாளர் அன்புள்ள அண்ணன் அவர்களுக்கு வணக்கம். தங்களின் 29.06.2022-ஆம் தேதியிட்ட கடிதம் பத்திரிகைகளின் வாயிலாகத் தெரிந்துகொண்டேன். பின்னர், திரு. மகாலிங்கம் அவர்கள் வழியாகப் பெறப்பட்டது. கடந்த 23.06.2022 அன்று நடைபெற்ற கழகப் பொதுக்குழுவில், 1.12.2021 அன்று நடைபெற்ற கழக செயற்குழுவால் கொண்டுவரப்பட்ட கழக சட்ட திட்ட திருத்தங்கள் அங்கீகரிக்கப்படவில்லை. ஆதலால், அந்த சட்ட திட்ட திருத்தங்கள் காலாவதி ஆகிவிட்டது. எனவே, கழக ஒருங்கிணைப்பாளர் என்ற உணர்வில் தாங்கள் எழுதியுள்ள கடிதம் செல்லத்தக்கதல்ல. கூட்டத்தை புறக்கணித்தது ஏன் மேலும், உள்ளாட்சி அமைப்புகளில் தற்போது காலியாக இருக்கும் பதவிகளுக்கு நடைபெற உள்ள தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு கடைசி நாள் 27.06.2022 அன்று முடிவுற்ற நிலையில், இத்தனை நாட்கள் பொறுத்திருந்து, கழகத்தின் வேட்பாளர்களை அதிகாரப்பூர்வமாக அறிவிக்காத நிலையிலும், 27.06.2022 அன்று கூட்டப்பட்ட தலைமைக் கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்திற்கு தாங்கள் உட்பட அனைவருக்கும் முறையாக தகவல் தெரிவிக்கப்பட்டு, மொத்தம் உள்ள 74 தலைமைக் கழக நிர்வாகிகளில் 65 பேர் கலந்துகொண்டனர். 4 பேர் உடல்நிலை சரியில்லை என்று தகவல் தெரிவித்திருந்தனர். தாங்கள் அந்தக் கூட்டத்தை புறக்கணித்த நிலையில், தற்போதைய தங்களின் இந்தக் கடிதம் ஏற்படையதாக இல்லை.

 

அதே போல், நாம் இருவரும் கூட்டாக அழைப்பு விடுத்த, கழகத்தின் பொதுக்குழுவை நடத்தவிடாமல் தடுத்து நிறுத்துவதற்காகத் தாங்கள், ஆவடி காவல் ஆணையருக்கு கடிதம் மூலம் புகார் அளித்தும், நீதிமன்றங்களின் மூலம் வழக்குகளைத் தாக்கல் செய்தும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை செயல்படாத நிலைக்குக் கொண்டு செல்வதற்கான அனைத்துப் பணிகளையும் செய்துவிட்டு, தற்போது இப்படி ஒரு கடிதத்தை எனக்கு அனுப்புவது ஏற்படையுதாக இல்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று அதில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

O பன்னீர்செல்வம் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் இல்லை என்று மூத்த நிர்வாகிகள் பேசியதை தற்போது எடப்பாடி பழனிசாமி எழுதிய கடிதத்தின் மூலம் உறுதி செய்து அதற்கு முற்று புள்ளி வைத்துள்ளது அவரது ஆதரவாளர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.