1% கூட வாக்கு பெற முடியவில்லை.. உங்களுக்கு MP சீட் கேக்குதா!! பிரேமலதாவை விளாசும் EPS!!

Photo of author

By Rupa

1% கூட வாக்கு பெற முடியவில்லை.. உங்களுக்கு MP சீட் கேக்குதா!! பிரேமலதாவை விளாசும் EPS!!

Rupa

edappadis-speech-on-not-giving-rajya-sabha-membership-seat-to-dmdk

ADMK DMDK: தமிழ்நாட்டில் காலியாக உள்ள ஆறு மாநிலங்களவை பதவிகளுக்கு வரும் 16ம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ஆளும் கட்சிக்கு நான்கு இடங்களும், அதிமுகவிற்கு இரண்டு இடங்களும் ஒதுக்கியுள்ளனர். அந்த வகையில் ஆளும் திமுகவானது தனது கட்சியை சேர்ந்த வில்சன், சல்மா, சிவலிங்கம் ஆகிய மூன்று பேரை நிறுத்தியுள்ளனர். மேற்கொண்டு மக்கள் நீதி மய்யம் கமல்ஹாசனுக்கு கொடுத்த ஒப்புதலின்படி ஒரு சீட் வழங்கியுள்ளனர். ஆனால் எதிர்க்கட்சியான அதிமுக யாருக்கு எம்பி சீட் வழங்கப் போகிறது என்பது குறித்து எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடவில்லை.

மற்றொரு பக்கம் தேமுதிக எங்களுக்கு ஓர் மாநிலங்களவை உறுப்பினர் பதவி வேண்டும் என்பதில் தீவிரமாக இருந்தது. ஆனால் அதிமுக தனது கட்சி சார்ந்தவர்களையே நிற்க வைத்துள்ளது. மேற்கொண்டு தேமுதிகவிற்கு அடுத்த ஆண்டு சீட்டு ஒதுக்குவதாக தெரிவித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது. இதற்கு முன்பாகவே கடந்த மக்களவைத் தேர்தலில் கூட்டணி வைத்துக்கொண்டால் ஒரு எம்பி சீட் வழங்குவதாக அதிமுக ஒப்பந்தம் கொடுத்தது என தேமுதிக கூறிவந்தது.

ஆனால் நாங்கள் அப்படி ஏதும் தெரிவிக்கவில்லை என அதிமுக திட்ட வட்டமாக தெரிவித்துவிட்டது. மேற்கொண்டு தேமுதிக , எம்பி சீட் கொடுத்தால் தான் வரப்போகும் சட்டமன்ற தேர்தலில் கூட்டணி என்றும் பேச்சுக்கள் அடிபட்டது. அப்படி இருக்கையில் அதிமுக தரப்பு தேமுதிக தலைமை மிகவும் கடினமாக நடந்து கொள்கிறது. சொல்லப்போனால் கூட்டணி கட்சிக்கு அழுத்தம் தருகிறது. கடந்த சட்டமன்ற தேர்தலில் ஒரு சதவீதம் கூட வாக்குப்பெற முடியவில்லை, ஆனால் எம்பி சீட்டுக்கு மட்டும் எப்படி கெடுபிடி போட முடியும் என பேசி வருகிறார்களாம்.

குறிப்பாக கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் தேமுதிக இணைந்து 2.59 சதவீதம் வாக்கு பெற்றாலும், இதில் தேமுதிக விற்கு 0.43 சதவீதம் மட்டுமே கிடைத்தது. இதனை வைத்து தான் எடப்பாடி பிரேமலதா விஜயாகாந்த்தை வசைபாடி வருகிறார்.