நடிகர் அஜித்திற்கு முன்னுரிமை அளித்த தேர்தல் அலுவலர்கள்.. வாக்குவாதத்தில் ஈடுபட்ட சீனியர் சிட்டிசன்கள்!!

0
120
Election officers who gave preference to actor Ajith.. Senior citizens who were involved in an argument!!
Election officers who gave preference to actor Ajith.. Senior citizens who were involved in an argument!!

நடிகர் அஜித்திற்கு முன்னுரிமை அளித்த தேர்தல் அலுவலர்கள்.. வாக்குவாதத்தில் ஈடுபட்ட சீனியர் சிட்டிசன்கள்!!

தமிழகம் முழுவதும் இன்று மக்களவை தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டிருக்கிறது. பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் மிகவும் ஆர்வமாக அவர்களின் ஜனநாயக கடமையை நிறைவேற்றி வருகிறார்கள். தேர்தல் ஆணையமும் 100% வாக்குப்பதிவை உறுதிசெய்ய வேண்டும் என்ற முனைப்புடன் உள்ளது.

எனவே சாமானியர்கள் முதல் திரைபிரலங்கள் வரை அனைவரும் அவரவர் வாக்கை செலுத்தி வருகிறார்கள். அந்த வகையில் நடிகர் அஜித் வழக்கம்போல திருவான்மியூரில் உள்ள வாக்குச்சாவடியில் அவரின் வாக்கை பதிவு செய்துள்ளார். அப்போது அங்கு வாக்குவாதம் ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது நடிகர் அஜித் எப்போதும் மக்களோடு மக்களாக வரிசையில் நின்று தான் வாக்களிப்பார். அதேபோல் இந்த முறையும் அஜித் வரிசையில் நின்றதாக கூறப்படுகிறது. அப்போது அங்கு வந்த தேர்தல் அதிகாரிகள் சிலர் அஜித்தை முதல் ஆளாக வாக்களிக்க அனுமதித்துள்ளனர். அவரும் வாக்களித்து விட்டு அங்கிருந்து கிளம்பி விட்டார்.

அப்போது அங்கு வரிசையில் நின்று கொண்டிருந்த சீனியர் சிட்டிசன் ஒருவர் தேர்தல் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். நாங்கள் அவருக்கு முன்பாகவே வந்து வரிசையில் காத்துகொண்டிருக்கும்போது நீங்கள் எப்படி அவரை முதல் ஆளாக உள்ளே அனுமதிக்கலாம் என கேள்வி எழுப்பியுள்ளனர். இதனால் அங்கு சற்று நேரம் பரபரப்பு நிலவியது. அஜித் இப்படி செய்துள்ள சம்பவம் அவரின் ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.