42 வயதில் முதல்  IPL போட்டியில் பங்கேற்கும் இங்கிலாந்து ஜாம்பவான்!! பென் ஸ்டோக்ஸ் விலகல் !!

Photo of author

By Vijay

42 வயதில் முதல்  IPL போட்டியில் பங்கேற்கும் இங்கிலாந்து ஜாம்பவான்!! பென் ஸ்டோக்ஸ் விலகல் !!

Vijay

England legend participating in the IPL

IPL: இங்கிலாந்து வேகபந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் முதல் முறையாக ஐ பி எல் போட்டியில் விளையாட உள்ளார்.

இந்தியாவின் பிரபலான கிரிக்கெட் தொடரான ஐ பி எல் போட்டியில் முதல் முறை பங்கேற்க உளார் இங்கிலாந்து அணியின் வேகபந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன். 42 வயது ஆன இவர் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார். இந்நிலையில் முதல் முறையாக ஐ பி எல் இல் பங்கேற்ப்பது ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

2025 ஆண்டுக்கான ஐ பி எல் தொடர் மார்ச், ஏப்ரல், மே ஆகிய மாதங்களில் நடைபெற உள்ளது. இந்த தொடருக்கான வீரர்களின் ஐ பி எல் மெகா ஏலம் இந்த மாத கடைசியில் நடைபெற உள்ளது. இந்த ஏலத்திற்கு முன் அனைத்து அணிகளும் தங்கள் தக்கவைக்கப்பட்ட வீரர்கள் பட்டியலை வெளியிட்டது.

இந்த முறை முதல்முறையாக இங்கிலாந்து ஜாம்பவான் ஜேம்ஸ் ஆண்டர்சன் ஐ பி எல் ஏலத்திற்கு தனது பெயரை பதிவு செய்துள்ளார். அவருக்கு அடிப்படை விலையாக ரூ.1.25 கோடி நிர்ணயித்துள்ளது. இவர் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற நிலையில் திடீரென ஐ பி எல் போட்டியில் பங்கேற்றது அனைவர் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது.

இங்கிலாந்து அணியின் ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் இந்த முறை ஐ பி எல் ஏலத்தில் பேரிரை பதிவு செய்ய வில்லை. அதனால் இந்த முறை ஐ பி எல் ல் அவர் பங்கேற்க மாட்டார். அதுமட்டுமல்லாமல் ஐ பி எல் புதிய விதிகளின் படி ஐ பி எல் மினி ஏலத்தில் அவருக்கு கலந்து கொள்ள இரண்டு ஆண்டுகளுக்கு தடை விதிக்கப்படும்.