திருமணத்திற்கு பிறகும் இதற்கு அனுப்ப வேண்டும் வித்தியாசமாக அக்ரிமெண்ட் போட்ட நண்பர்கள்

0
104
Even after marriage, friends who have signed a separate agreement should be sent to this
Even after marriage, friends who have signed a separate agreement should be sent to this

திருமணத்திற்கு பிறகும் இதற்கு அனுப்ப வேண்டும் வித்தியாசமாக அக்ரிமெண்ட் போட்ட நண்பர்கள்

சமீப காலமாக திருமணத்தின்போது வித்தியாசமாக பரிசளிப்பது மற்றும் வித்தியாசமான ஃபோட்டோ சூட் நடத்துவது போன்ற பல சுவாரசியமான நிகழ்வுகள் நடந்தேறி வருகிறது.

அந்த வகையில் தற்போது திருமணத்திற்கு பிறகு தங்களுடைய நண்பனை தங்களுடன் கிரிக்கெட் விளையாட அனுமதிக்க வேண்டும் என அவரை திருமணம் செய்து கொள்ள உள்ள மணப்பெண்ணிடம் கையெழுத்து வாங்கியுள்ள  சுவாரசியமான சம்பவம்  நடைபெற்றுள்ளது.

மதுரையைச் சேர்ந்த ஹரி பிரசாத் மற்றும் தேனியைச் சேர்ந்த பூஜா என்பவருக்கும் மதுரையில் திருமணம் நடைபெற்றது. இதில் மணமகன் ஹரி பிரசாத் கிரிக்கெட் பிரியர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில்தான் திருமணத்திற்கு வந்த அவருடைய நண்பர்கள் இப்படி ஒரு வித்தியாசமான அக்ரிமெண்ட்டை போட்டு அவரை திருமணம் செய்து கொள்ள உள்ள மணப்பெண்ணிடம் கையெழுத்து வாங்கியுள்ளனர். அவர்கள் இதற்காக 20 ரூபாய் பத்திரத்தில் மணமகள் பூஜாவிடம் கையெழுத்து வாங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.