பரபரப்பு! அனைத்து துறை அதிகாரிகளுக்கும் அதிரடியாக பறந்த உத்தரவு!

0
224

தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், நிதித்துறை, முதலமைச்சர் முகவரி வளர்ச்சி துறை, சட்டத்துறை மற்றும் திட்டம் பொதுத்துறை, விளையாட்டு மேம்பாட்டுத்துறை, இளைஞர் நலத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, தொழிலாளர் நலன் சிறுபான்மையினர், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, பழங்குடியினர் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை உயர்கல்வித்துறை, போன்ற துறைகளில் முக்கிய அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார் என்று சொல்லப்படுகிறது.

இந்தத் துறைகளில் அரசின் நலத்திட்டங்கள் தொடர்பாகவும், புதிய அறிவிப்புகள் தற்போதைய நிலை தொடர்பாகவும் அவர் கேட்டறிந்திருக்கிறார். அதன் பிறகு புதிதாக ஆரம்பிக்கவுள்ள 10 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை ஆரம்பிப்பது, அரசு கல்லூரிகளில் காலியாக இருக்கும் பணியிடங்களை நிரப்புவது மாணவ மாணவிகளுக்கு விடுதி கட்டுதல் உள்ளிட்ட பணிகள் தொடர்பாகவும், ஆய்வு செய்து பணிகளை மிக துரிதமாக முடிப்பதற்கு ஆணையிட்டுள்ளார்.

இதனை தொடர்ந்து சமூக நலன் மற்றும் மகளிர் துறை சார்பாக 6 வயதிற்குட்பட்ட ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளின் குறையை போக்குவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

அதன்பிறகு மகாபலிபுரத்தில் நடைபெற உள்ள நாற்பத்தி நான்காவது ஒலிம்பியாட் போட்டியை சிறப்பாக நடத்துமாறும் இலங்கை தமிழர் முகாம்களில் நடைபெற்றுவரும் வீடு கட்டும் பணிகளை துரிதமாக முடிவுக்கு கொண்டு வருமாறும் குறைதீர்ப்பு மேலாண்மை கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்களின் மீது நடவடிக்கை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்றும், அது தொடர்பான அதிகாரிகளுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டிருக்கிறார்.

Previous articleசிதம்பரம் நடராஜர் கோவில் நிர்வாகம் அரசுடமையாக்கப்படுகிறதா?
Next articleஇந்த ராசிக்காரர்களுக்கு தொலைபேசியின் மூலமாக இனிமையான செய்தி வரும்!