முதல்வர் எடப்பாடிக்கு கூடுதல் பாதுகாப்பு:! உளவுத்துறை எச்சரிக்கை! பின்னணி என்ன?

0
71

முதல்வர் எடப்பாடிக்கு கூடுதல் பாதுகாப்பு:! உளவுத்துறை எச்சரிக்கை! பின்னணி என்ன?

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு அடிப்படைவாதிகள்,
அதிருப்தியாளர்கள்,மற்றும் தமிழ் ஆதரவாளர்கள்
ஆகியோர்களால் ஆபத்து ஏற்படலாம் என்று உளவுத்துறை எச்சரித்ததன் அடிப்படையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு காவல்துறை பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தமிழக காவல்துறையின் சிஐடி செக்யூரிட்டி பிரிவின்கீழ்,தமிழக முதல்வருக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகின்றது.அவர் தங்குமிடம் வீடு அலுவலகம் மற்றும் பயண பாதுகாப்பு என 24 மணி நேரமும் ஆயுதப்படை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தற்போதுள்ள சட்டம் ஒழுங்கு நிலையை கருத்தில் கொண்டு முதல்வருக்கு மேலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறப்படுகின்றது.மேலும் இன்று கூடிய செயற்குழு கூட்டத்தில் முதல்வர் வேட்பாளர் யார் என்ற முரண்பாடுகள்,
காரணமாக அரசியல் பிரச்சினை ஏற்படலாம் என்றும் உளவுத் துறை எச்சரித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

author avatar
Pavithra