தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்திற்கு கொரோனா பாதிப்பு! அதிர்ச்சியில் தொண்டர்கள்..!!

0
73

தேமுதிக தலைவர் விஜயகாந்தை தொடர்ந்து அவரது மனைவியும் தேமுதிக பொருளாளருமான பிரேமலதா விஜயகாந்திற்கும் கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.

தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு கடந்த 22ம் தேதி சென்னை, மணப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் வழக்கமான உடல் பரிசோதனை செய்ய சென்ற போது அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து, அவர் அதே மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

மேலும், விஜயகாந்த் வீட்டில் உள்ள அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், வீட்டில் உள்ள யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என்று பரிசோதனை முடிவுகள் வந்தது. அதனால், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் விஜயகாந்துடன், பிரேமலதா உடன் இருந்து கவனித்து வந்தார். இந்நிலையில், குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் மீண்டும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

அப்போது, விஜயகாந்த் மனைவியும் தேமுதிக பொருளாளருமான பிரேமலதா விஜயகாந்திற்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, அவர் உடனடியாக சென்னையில் உள்ள மியாட் மருத்துமவனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். தேமுதிக கட்சி நிகழ்ச்சிகள், மற்றும் பொது நிகழ்ச்சிகளில் பிரேமலதா விஜயகாந்த் தான் தலைமையேற்று நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
Parthipan K